Advertisment

Tamil News Today : வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

Tamil News : அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

Tamil News Today: தமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி ஆந்திரா, கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு.

Advertisment

இணைய வழி மூலமாக, நடத்தப்படும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார் .. பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்., இந்த மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்,.

கொரோனா தொற்றால் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்ஸா மெதாசோன் மருந்து நல்ல பலனை தருவதால், அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். மற்றவை நிரூபிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் 180 தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் 35 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனை நடத்தும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Updates: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:51 (IST)11 Sep 2020

    தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம்

    தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

    * புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என காங்கிரஸ் அறிவிப்பு

    * தெலங்கானா பொ​றுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தா​கூர் நியமனம்

    * ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லகுமார் எம்.பி. நியமனம்

    * தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம்

    20:35 (IST)11 Sep 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா தொற்று; 77 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால், 7 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    19:40 (IST)11 Sep 2020

    தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழக அரசு 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    18:54 (IST)11 Sep 2020

    வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

    வேட்பாளர்களின் குற்றப் பிண்ணணியை செய்தித்தாள்களிலும் அந்தந்த கட்சிகள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறியை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    18:44 (IST)11 Sep 2020

    கிசான் திட்டத்தில் முறைகேடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.26 லட்சம் மீட்பு

    தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.26 லட்சம் மீண்டும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதுவரை 4300 பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    18:32 (IST)11 Sep 2020

    தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் மருத்துவ குழுவின் அறிக்கைக்குப் பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் இருமொழிக் கொள்கை தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

    18:26 (IST)11 Sep 2020

    மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அன்காடிக்கு கொரோனா தொற்று உறுதி

    மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் சுரேஷ் அன்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:33 (IST)11 Sep 2020

    மதுரையில் பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

    மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வேட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கல்வெட்டில் குலசேகர பாண்டிய மன்னர் பெயர் உள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    17:26 (IST)11 Sep 2020

    ‘எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி விமர்சிக்கின்றனர்’- முதல்வர் பழனிசாமி பேச்சு

    காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நோய் பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றனர். ஆனால், அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று கூறினார்.

    16:48 (IST)11 Sep 2020

    எம்.ஜி.ஆர். சகோதரன் மகன் எம்.சி. சந்திரன் மரணம்

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணியின் மகன் எம்.சி. சந்திரன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலை பதிவு செய்துள்ளார் முதல்வர்.

    16:40 (IST)11 Sep 2020

    அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாறும் டிக்டாக் செயலி

    வருகின்ற 20ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்.

    16:40 (IST)11 Sep 2020

    அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாறும் டிக்டாக் செயலி

    வருகின்ற 20ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்.

    16:37 (IST)11 Sep 2020

    முதல்வர் பேச்சு - 2/2

    காஞ்சி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் நோய் பரவல் அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

    16:36 (IST)11 Sep 2020

    இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது - முதல்வர்

    மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எதிர்கட்சிகள் அரசை குறை கூறி வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அர்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இறப்பு விகிதமும் குறைந்துவிட்டது, 100 க்கு மேல் சென்ற பலி எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவும் என்று அவர் கூறியுள்ளார்.

    16:32 (IST)11 Sep 2020

    புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு தேர்வு

    வருகின்ற 21ம் தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணைகள் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:44 (IST)11 Sep 2020

    ஓ.டி.டியில் வெளியாகும் க/பெ ரணசிங்கம்

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருந்த கபெ ரணசிங்கம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் விஜய் சேதுபதி. ஜீப்ளக்ஸில் வெளியாக இருக்கும் இந்த படம் ஐந்து இந்திய மொழிகளிலும், 10 தேசிய மொழிகளிலும் 150 நாடுகளிலும் ஓட உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    15:36 (IST)11 Sep 2020

    தங்கம் விலை குறைவு

    ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 176 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை ரூ. 4898.

    15:33 (IST)11 Sep 2020

    திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்?

    மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பிறகே திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு.

    15:31 (IST)11 Sep 2020

    இமானுவேல் சேகரனின் தியாகங்களை நினைவு கூறுவோம் - பன்னீர் செல்வம்

    ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு நாளில் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று துணை முதல்வர் ட்வீட் வெளியிட்டுள்ளார் .

    15:07 (IST)11 Sep 2020

    ஆசிட் வீச்சு வழக்கு : இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவர் செவிலியர் விஜயகுமாரி. அவர் மீது மணிகண்டன் மற்ற்றும் விஜய்குமார் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்விருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நாமக்கல் நீதிமன்றம்.

    15:07 (IST)11 Sep 2020

    சென்னையில் இருந்து ஊருக்கு பயணமான ஒரு கோடி நபர்கள்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் இன்று வரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளனர். மாநகர பேருந்துகள் மூலம் 1,01,23,000 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    14:54 (IST)11 Sep 2020

    பாரதிக்கு சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி

    பாரதியார் நினைவு தினமான இன்று அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் காங்கிரஸ் கட்சியினர்.

    14:42 (IST)11 Sep 2020

    மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிமுக பச்சைக்கொடி காட்டும் - ஜெயக்குமார்

    மத்திய அரசின் நல்ல திட்டஙக்ளுக்கு அதிமுக ஆட்சி பச்சை கொடி காட்டும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். இது தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    14:41 (IST)11 Sep 2020

    எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்ட அனுமதி 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு?

    காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஒ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    14:35 (IST)11 Sep 2020

    திரையரங்குகளை திறக்க வேண்டும்

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 5 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கும் திரையரங்குகளை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை

    14:35 (IST)11 Sep 2020

    பூர்ணசந்திரன் நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

    கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதில் மனு மற்றும் நியமனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் செப்டம்பர் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    14:35 (IST)11 Sep 2020

    உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

    மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக சென்னை சேத்துப்பட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

    14:29 (IST)11 Sep 2020

    தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு

    சென்னை, மதுரை, சேலம், நெல்லை உட்பட 14 நகரங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வினை எழுதுகின்றனர்.

    13:54 (IST)11 Sep 2020

    நீட் தேர்வு வழக்கு!

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் . வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    13:15 (IST)11 Sep 2020

    நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

    உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல். 

    13:14 (IST)11 Sep 2020

    முதல்வர் பேனர் அகற்றம்!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    13:12 (IST)11 Sep 2020

    அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

    எல்லையில் சீனா அத்துமீறுவதை தடுக்க முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை . பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல் பங்கேற்பு. 

    13:12 (IST)11 Sep 2020

    வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் வடிவேல் பாலாஜியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது  நடிகர் கார்த்தி ட்வீட். 

    13:01 (IST)11 Sep 2020

    காணொலி மூலம் பிரதமர் மோடி உரை!

    புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம். புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும். கல்விக்கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம். புதிய கல்விக் கொள்கையால் பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும். எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    11:44 (IST)11 Sep 2020

    ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் . செல்போன் நிறுவனத்திற்கு இசையமைப்பு பணிக்காக பெற்ற ரூ.3.47 கோடி ஊதியத்திற்கு வரி செலுத்தவில்லை என புகார். 

    11:14 (IST)11 Sep 2020

    தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் !

    தியாகி இம்மானுவேல் சேகரனின் 63ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    11:12 (IST)11 Sep 2020

    முதல்வர் ஆய்வு!

    காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்

    10:31 (IST)11 Sep 2020

    விஜய் சேதுபதி நேரில் இரங்கல்!

    சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Tamil News Today Live: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சட்டமன்ற உறுப்பினர், கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, தி.மு.க. தலைமை, ஆகஸ்ட் 13 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தி.மு.க.வில் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்திருந்தார்.

    மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கு.க. செல்வம் மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த 17வது நகர உரிமையியல் நீதிமன்றம், செப்டம்பர் 18-க்குள் பதிலளிக்க தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக பத்திரிகையில் வெளியான செய்தியை, இணைத்துள்ளார். தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment