Tamil News Today Updates: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ், தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன்பு இன்று ஆஜர் படுத்தப்படவுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி குடியிருப்புக்கு முத்துராஜ் அழைத்து செல்லப்பட்டார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்ர் முத்துராஜ் தலைமறைவாகினார். சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கான்பூர் அருகே முன்னாள் அமைச்சரின் கொலையில் தொடர்புடைய ரவுடிகளை, பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாத்தான்குளம் வணிகர்கள் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் வரும் 16-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரட்டை கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும், என்ற நம்பிக்கையை சிபிசிஐடி நிலைநாட்டியுள்ளது என, ஆய்வாளர் இரு எஸ்.ஐ-க்களை அதிரடியாக கைது செய்ததற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கான்பூர் என்கவுன்டர் : ரவுடி கும்பல் சுட்டதில் 8 போலீசார் பரிதாப மரணம்
சாத்தான்குளம் சம்பவத்தில் காட்சியளித்த பெண் காவலர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரின் அச்சத்தைப் போக்க தொலைபேசியில் அழைத்துப் பேசி, நீதிபதிகள் தைரியம் கூறினர். தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 98,000-ஐ கடந்துள்ளது. மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த, 75,000 படுகைகள் தயார் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டுமொத்த காவல்துறையின் நற்பெயரையும் களங்கப்படுத்தும் வகையில், சாத்தான்குளம் சம்பவம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? என்று அவர் வினவி உள்ளார். பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கில் அப்ருவராக மாறிய ரேவதி, நீதிமன்ற விசாரணைக்குப் பின் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முத்துராஜ் என்ற காவலர் தலைமறைவாக உள்ளார். வழக்கில் அப்ரூவராக உள்ள தலைமை காவலர் ரேவதி , தூத்துக்குடி முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜராகி சுமார் 5 மணி நேரம் விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஏற்கெனவே கோவில்பட்டி முதன்மை நீதிபதி பாரதிதாசனிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்
முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்து குற்றவாளி உறுதி செய்யப்படுகின்றனர்
* இந்த குற்றவியல் சட்ட நடைமுறை சாத்தான்குளம் விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது
* சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
திருச்சி- 47
நெல்லை- 41
கோவை- 36
விழுப்புரம் - 33
திருப்பத்தூர் - 33
தூத்துக்குடி - 27
கடலூர் - 20
புதுக்கோட்டை - 18
திருவாரூர் - 17
நாகை - 17
திண்டுக்கல் - 17
ஈரோடு - 14
கிருஷ்ணகிரி - 14
தர்மபுரி - 14
தஞ்சை - 13
திருப்பூர் - 5
தென்காசி - 4
கரூர் - 4
நாமக்கல் - 4
நீலகிரி - 1
'Fit Hai to Hit Hai India' webinar - Interacting with students @KirenRijiju@Pvsindhu1@chetrisunil11 #FitIndiaTalks @HRDMinistry @IndiaSports @FitIndiaOff https://t.co/3OMXT9mFA7
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 3, 2020
விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோருடன் ஃபிட் ஹே டூ ஹிட் ஹே இந்தியா என்ற வெப்பினார் லைவ்வில் நீட் தேர்வுகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Students, don’t forget to join me tomorrow at 5 pm in conversation with MoS @YASMinistry Shri @KirenRijiju, Olympic Medalist @Pvsindhu1 & Captain-Indian Football Team @chetrisunil11 around fitness & more.#FitIndiaTalks
Ask your friends to join in too! pic.twitter.com/AXr9FeCFHj— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 2, 2020
மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார். நீட் தேர்விற்கு 16 லட்சம் மாணவர்களும், ஜே.இ.இ. மெயின் தேர்வுகளுக்கு 9 லட்சம் மாணவர்களும் விண்ணப்பத்திருக்கும் நிலையில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் இன்றைய அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
கொரோனா சிகிச்சையின் போது உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியை நேரில் சென்று வழங்கினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Met with the family of Late Dr Aseem Gupta ji who lost his life to Corona.
We cannot do anything to bring back the "People's Doctor", but it is our duty to support families of those who lay down their lives for us.
An ex gratia of ₹1 crore was given to the family today. pic.twitter.com/YlYCKZ9siy
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 3, 2020
லடாக் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிரத்யேக புகைப்படங்கள்
இந்தியா மற்றும் சீனாவிற்கு மத்தியில் எல்லை பிரச்சனைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று லடாக் சென்ற பிரதமர் அங்கிருக்கும் ராணுவ வீரர்களுடன் உடையாடியானர். #Modi #China #India #Ladakh pic.twitter.com/9GubhCMVHx
— IE Tamil (@IeTamil) July 3, 2020
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஜூலை 6 முதல் 9 வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த டோக்கன்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா வைரஸ் கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூவரும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக ஷாகித் ட்வீட் செய்துள்ளார்.
Alhamdulillah, my wife & daughters, Aqsa & Ansha have re-tested after our previously positive results for #COVIDー19, & are now clear. Thanking u all for your continuous well wishes, & may the Almighty bless you and yours. Now back to family time; I’ve missed holding this one 😊 pic.twitter.com/J5mDv7DnBD
— Shahid Afridi (@SAfridiOfficial) July 2, 2020
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதில் இரண்டு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு வண்ண பானைகள், சிறிய வகை உலை கலன், பாசி, பெரிய விலங்கின் எலும்பு, இணைப்பு குழாய் பானைகள் ஆகியவையும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
”இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது" என லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. செக்காரக்குடியில் இறந்த பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழரத வீதி மற்றும் கணேசபுரம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சுகாதார ஆய்வாளர் திரு. மாதவன் பிள்ளை அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
கால்வானில் சீன வீரர்களுடனான வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு சில வாரங்களான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை லடாக், லே, எல்லை மோதலை மறுஆய்வு செய்ய வந்தார். மே மாத தொடக்கத்தில் எல்லை பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, முதல்முறையாக அங்கு விசிட் செய்திருக்கிறார் மோடி
நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என கொரோனா பாதிப்பு காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லே லடாக்கிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளித்ததாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.
Motivating & commemorating the bravehearts of the Indian Army, PM @NarendraModi ji visits Ladakh to interact with the soldiers. pic.twitter.com/gDGDtRFNJj
— Piyush Goyal (@PiyushGoyal) July 3, 2020
சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடியபோது சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை அரசியல் பிரமுகர் ஒருவர் காப்பாற்ற முயற்சி என தகவல் கிடைத்துள்ளது. போலீசார் சோதனை நடத்திய போது ஸ்ரீதரின் காரில் அரசியல் பிரமுகரின் ஆட்கள் இருந்ததாக தகவல்
சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடியபோது சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை அரசியல் பிரமுகர் ஒருவர் காப்பாற்ற முயற்சி என தகவல் கிடைத்துள்ளது. போலீசார் சோதனை நடத்திய போது ஸ்ரீதரின் காரில் அரசியல் பிரமுகரின் ஆட்கள் இருந்ததாக தகவல்
ஜூலை.7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. சோதனை முயற்சி வெற்றிபெற்றால் ஆக.15 முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து BBV152 என்ற மருந்தை ஐசிஎம்ஆர் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 379 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பாதிப்பு 6,25,544-ஆக உயர்ந்துள்ளது. இதிலிருந்து குணமடைந்தவர்கள் - 3,79,891-ஆக இருக்கும் நிலையில், மொத்த உயிரிழப்பு - 18,213-ஆக அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights