Tamil News Today : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகிய மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசம் மாநிலமாக உதயமான நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலாசாரம், நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில் அருணாச்சல பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் பாராட்டு.
நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.காணொலி காட்சி வாயிலாக, காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாக விலகினரே தவிர, பாஜக எதையும் செய்யவில்லை என்றார்.
மஜூலி ஆற்றிடை தீவுக்கு பாலம் அமைக்க அடிகல் நாட்டிய பிரதமர் மோடிக்கு அப்பகுதி மக்கள் விளக்கு ஏற்றி நன்றி தெரிவித்தனர்.
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம்பெறாத தமிழக வீரர் டி.நடராஜன் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Suryakumar Yadav, Hardik, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, Varun Chakravarthy, Axar Patel, W Sundar, R Tewatia, T Natarajan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Navdeep, Shardul Thakur. https://t.co/KkunRWtwE6
— BCCI (@BCCI) February 20, 2021
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. எம்பிபிஎஸ் படிப்பிற்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணமாக நிர்ணயம். மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அரசு கட்டணம் நிர்ணயம்
"பெட்ரோல் விலை என்பது மிகப்பெரிய பிரச்சனை, எந்த பதில் கூறினாலும் யாரையும் திருப்தி படுத்த முடியாது. விலை குறைவை தவிர மக்கள் வேற எந்த பதிலும் ஏற்க மாட்ட்டார்கள்" என்று நிதியமைச்சர் நிர்மலசீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, லதா- ரஜினி தம்பதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருமண நாள் வாழ்த்து தெரிவித்தாகவும், இந்த சந்திப்பின் போது, அரசியல் பேசப்படவில்லை எனவும் ரஜினி தரப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
விஜய்ஹசரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஜார்க்கண்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 94 பந்துகளில் 19 பவுண்டரிகளையும் 11 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 173 எடுத்துள்ளார். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 422 ரன்களைச் சேர்த்துள்ளது.
போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் நடிகர் ரஜினியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தி வருகிறார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள புகலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மடக்கத்தரா வரை 165 கி.மீ நீளத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுத்த உள்ளது. 5 ஆயிரத்து 70 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும், இந்த மின்சார விநியோகத் திட்டம் சுமார் 2,000 மெகா வாட் மின்சாரத்தை தங்கு தடையின்றி எடுத்துவரும் திறன் கொண்டதாக உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி அயோக்கின் 6 ஆவது நிர்வாக கூட்டத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்கவில்லை. காணொலி மூலம் நடைபெற்று வரும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்பு
மதுரையில் ரத யாத்திரை அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு. 100 வார்டுகளிலும் நிபந்தனைகளுடன் அனுமதி
வழங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights