/tamil-ie/media/media_files/uploads/2021/01/shankar.jpg)
Tamil News : டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு காவல் துறை சிறப்பு பிரிவினர் குவிப்பு. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் .மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு.
புதிய நியமன எம்.எல்.ஏ.வாக பாஜகவின் மாநில துணைத்தலைவராக உள்ள விக்ரமனை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காந்தி நினைவு தினம் . மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி வரும் இந்தியாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பாராட்டு
நாளை நடைபெற இருக்கும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இன்று மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை ஆர்.பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு சந்தித்து பேசினர்.
முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார்.
இன்று மட்டும் 3 அதிமுக அமைச்சர்கள் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், விஜயபாஸ்கர் தனியாகவும், மற்ற 2 அமைச்சர்கள் தனியாகவும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில்யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 5,72,060 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 72.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 3வது இடத்தில் ராஜஸ்தானும் உள்ளன.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனது? ஆளுநரின் ஒப்புதல் எப்போது? இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
मोदी सरकार का ट्रेडमार्क- अमानवीय अत्याचार! pic.twitter.com/LL2KGeBTjg
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2021
போராடும் விவசாயிகள் மீது பாஜக அரசு மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் நிகழ்த்திவருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து சசிகலா கடந்த 27ம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது. கூட்டணி அமைக்கும் பட்சத்தில், பாமக இல்லாத கூட்டணியில் தான் தேமுதிக கட்சி இடம்பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை மெய்நிகர் கூட்டமாக பிரதமர் தலைமையேற்று நடத்தினார். அதில் பங்கேற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Attended today (30/1/21) the virtual Pre-Budget all party meet chaired by our Hon. Prime minister Shri Narendra Modi Ji on behalf of my AIADMK party.
Also present were Defence minister Shri Rajnath Singh Ji , Parliamentary affairs minister Shri Pralhad Joshi Ji , pic.twitter.com/RvHArxaL4o— P.Ravindhranath (@OPRavindranath) January 30, 2021
சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனவல்லா இன்று, நோவாவாக்ஸின் கோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியை பெறுவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். மேலும் இது ஜூன் 2021ன் போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்றும், இங்கிலாந்தில் நடத்தபப்ட்ட சோதனைகளில் 89.3% செயல்திறன் கொண்டது இந்த தடுப்பூசி என்றும் அறிவித்துள்ளார்.
துணை முதல்வரோடு பயணிப்பதில் பெருமை என்று குஷ்பு ட்வீட்.
Honoured to travel with our Deputy CM H’ble @OfficeOfOPS Avl . Thank you for the pic Sir. 🙏🏻🙏🏻 pic.twitter.com/nStTm1AmyQ
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 30, 2021
என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை!'
'என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2021
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றார். ஆனால், விருதை அவர் உரியவர்களின் கையில் வழங்காமல், மேசை மீது வைத்தார். மேசையிலிருந்து உரியவர்கள் தங்கள் விருதுகளை எடுத்துச் சென்றனர். இதன்மூலம், கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்.
வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் .பொருள்செயல்வகை அதிகாரத்தில் உள்ள 753-வது குறள் இடம் பெற்றுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights