Tamil News Today nivar cyclone : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மீண்டும் புதிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தென் தமிழகத்தின் மேற்குப்பகுதி நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் படிப்படியாக தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் . உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம் . சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அக்கட்சி தலைவர் திருமாவளவன் குழந்தைகளுடன் கேக் வெட்டினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பிரதமர் மோடி, நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இன்று நிவாரணங்களை அறிவித்தார். நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலும், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். ஆட்சியாளர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மக்கள் துன்பப்படுகின்றனர்; புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் நவம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய, மாநில சுகாதார துறை செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 37வது இடத்தை மும்பை ஐஐடியும், 47 மற்றும் 50வது இடத்தை டெல்லி, சென்னை ஐஐடிக்கள் பெற்றுள்ளன.
இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.@IndiaToday இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 27, 2020
தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்குச் செல்லும் மாணவர் யுவன்ராஜ்; திருவண்ணாமலையில் இதேபோல் தவிக்கும் 3 மாணவியர் என அவலங்கள் தொடர்கின்றன!@CMOTamilNadu அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள். கட்டணத்தை திமுக ஏற்கும்! pic.twitter.com/QaTfVwDiWB
— M.K.Stalin (@mkstalin) November 27, 2020
வேல் யாத்திரைக்குப் பெருகிய ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் என்றும் அதனை அவர்கள் கட்சி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
பூண்டி ஏரியிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரில் சூழ்ந்து தத்தளித்து வரும் மக்களை தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார்.#NivarCyclone pic.twitter.com/wQIQcOnkip
— Vijayakant (@iVijayakant) November 27, 2020
தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 27, 2020
80-வது அகில இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பின் மீது, ஒவ்வொருவரும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க தொடர்ச்சியான பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் போலீஸார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights