Tamil News Today Live : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்குமாறு, திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில். இது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக வலியுறுத்தியுள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து தீர்மானம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தெளிவாக ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் யுஜிசி-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்)-செப்.24 முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test-NET) இந்தியாவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறுவதற்கானத் தகுதியையும் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது
விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020
விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020
அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020
ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்
சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 42 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 226 கோடி ரூபாய் கடன்களை வழங்க, வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்க கூடாது அல்லது எதிர்க்க கூடாது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். இந்தி தினம் - 2020-ஐ முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள்/பரிந்துரைகளை நாளை (செப்டம்பர் 15) வரை சமர்ப்பிக்கலாம்.
பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில் (https://padmaawards.gov.in) மட்டுமே மனுக்கள்/பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தி தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழியையும், தங்களது தாய்மொழியையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அமித்ஷா நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார் .
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது எனது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கின் விசாரணை கண்காணிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணம் குறித்து பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசார் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு. தொடர்புடைய நீதிபதியிடம் முறையிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தல். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முறையீடு.
ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்றார்.
நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மக்களவையில் பேச்சு . நீட் பாடத்திட்டத்தின் காரணமாகவே தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் டி.ஆர்.பாலு கூறினார்.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கொரோனா காலகட்டத்தால், கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இதனால், கலைவாணர் அரங்கம் முழுவதும் காவல்துறையும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் 150 அவைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல வளாகத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிருமிநாசினிகள் கொண்டு தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அரங்கில் தனி நபர் இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்காக மூன்றாவது தளத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights