Tamil News Today: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
காலை 11 மணியளவில் இக்கூட்டம் கூடுகிறது. இதில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் இடம் பெறுகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை. ஜாமின் கிடைக்காத விரக்தியில் கைதி தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.92.90-க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.86.31-க்கு விற்பனை
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்கான உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்டது
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தெடங்கியபோது, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் முதல்வர் ஆன பின் மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று திமுகவினர் சபதம் எடுத்து்ளளனர்.
டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளது . சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
பட்ட படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டினை பழைய முறைப்படி தொடர கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
"கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02%ஆக இருக்கும். அதோடு தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது" என்று நிதித்துறை செயலர் கிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக கட்சியினர், பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறியுள்ளார்.
'நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்று பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளுடன் மருத்துவ காப்பீடு திட்டத்தை நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது எனவும் திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 15-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வருகின்றன.
இதுக்குறித்த முழு செய்திகள் இங்கே
தமிழக அரசு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட ஊதியங்களை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஊதிய மறு சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின்படி நியாய விலைக்கடை புதிய ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5.000லிருந்து ரூ.6,250 ஆகவும், அதேபோல கட்டுநர்களுக்கு ரூ.4,250லிருந்து ரூ.5,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ள
சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights