Tamil News Today us election results : ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியை நெருங்கும் பைடன். 248 இடங்களில் வெற்றி.
சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி.தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல். கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.
பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க என மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது .ஏற்கெனவே ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம் மாநிலத்திலும் தடை .
அர்ணாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது மும்பை போலீஸ்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக அரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடர்ந்துள்ள 3 அவதூறு வழக்குகளில், அவரை டிசம்பர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் ஜோ பிடென் 264 இடங்களைப் பெற்று வெற்றியை நெருங்கி வரும் நிலையில், அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
STOP THE COUNT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 5, 2020
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினர் ஒருபோதும் சட்டத்தை மீறுபவர்கள் அல்ல. என்ன நடந்தாலும் துள்ளிவரும் வேல் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி, “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு ரூ.2,000 வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, “குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் ஏதுமில்லை. ரூ.2,000 வழங்கப்படும் என்பது வதந்தி” என்று தெரிவித்துள்ளார்.
கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. நேரு வழக்கு தொடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? என்றனர். எம்.எல்.ஏ. நேரு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய போக்குகளை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
— KS_Alagiri (@KS_Alagiri) November 5, 2020
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது; வழிகாட்டும் அரசியல் தான் எங்களுடையது. நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம். ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ரஜினிக்கு அவர் உடல்நலன் தான் முக்கியம்; அரசியல் பிரவேசம் குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவருடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். ரஜினியிடம் ஆதரவு கேட்போம். வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. வேலை வாங்கிக் கொடுப்பதே எனது வேலையாக இருக்கும். நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும். சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும்” என்றார்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு அமித்ஷா கண்டனம் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights