Advertisment

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வானிலை

வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வானிலை அறிவிப்பு :

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் தெரிவித்தார்.

 

வெள்ள அபாய எச்சரிக்கையில் மீண்டும் கேரளா: முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் மாநில அரசு

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment