தமிழகத்தில் 34 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் 45 பேர் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 34 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேருக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டி.ஜி.பி அனுப்பிய சர்குலர் அவருக்கு பொருந்தாதா?
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ், திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணை அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் த.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 45 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக இருந்த பகலவனுக்கு காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த கார்த்திக்கேயன், திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்திற்கு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்யபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன்குமார் அபிநபு, மதுரை காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக மோகன் ராஜ், பெரம்பலூர் எஸ்.பி.,யாக ஷியாமளா தேவி, விருதுநகர் எஸ்.பி.,யாக ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil