“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா – எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
அந்த கூடுதல் மனுவில், கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு இருந்ததால் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பில் இருந்த 7500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். வணிக வளாகம் முழுதும் மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோயம்பேட்டு வணிக வளாகத்தை சேர்ந்தவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதா என்பது தெரியாத நிலையில், திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு மாற்றுவதால் தொற்று இருந்தால் பரவ வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதனால் வியாபாரிகளுக்கு முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் திருமழிசையில் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
மது விற்பனை; நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் – மநீம வழக்கு
எனவே கோயம்பேடு அங்காடியை சார்ந்தவர்களிடம் அதிக அளவிலான பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், அவர்களில் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Thirumazhisai market corona safety measurement madras high court tn govt
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?
உங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு!