தூத்துக்குடி: அலுவலகத்தில் புகுந்து வி.ஏ.ஓ கொலை; மணல் கொள்ளையர்கள் கொடூரம்

அரசு அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை; மணல் கொள்ளையர்கள் கொடூரச்செயல்; தூத்துக்குடியில் பயங்கரம்

அரசு அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை; மணல் கொள்ளையர்கள் கொடூரச்செயல்; தூத்துக்குடியில் பயங்கரம்

author-image
WebDesk
New Update
murder vao

அரசு அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் 55 வயதான லூர்துபிரான்சிஸ். இவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் மாநாட்டில் கத்தியுடன் சுற்றிய நபர்; கடும் பரபரப்பு

வெட்டிக்கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Thoothukudi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: