/tamil-ie/media/media_files/uploads/2022/04/electricity-consumption-1200.jpg)
TNEB Electricity grievance meeting at Trichy: திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி (முதல் வெள்ளிக்கிழமை) முசிறி கோட்ட அலுவலகத்திலும், 05-ம் தேதி துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 8-ம் தேதி, ஸ்ரீரங்க கோட்ட அலுவலகத்திலும், 12-ம் தேதி லால்குடி கோட்ட அலுவலகத்திலும், 15-ம் தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும், 19-ம் தேதி திருச்சி நகரிய கோட்ட அலுவலகத்திலும், 26-ம் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதையும் படியுங்கள்: அரசு நிலம் ஆக்கிரமிப்பு…. பல்கலைகழகத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
இதில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மின்வாரியத்துறை மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.