TTV Dhinakaran's lockdown photos went viral on social media : கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் நின்று உதவி வருகின்றனர்.
Advertisment
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தன்னுடைய தொண்டர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார். அவர் ஆக்ட்டிவாக இருப்பது, அவரின் டிவிட்டர் பக்கத்தை பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.
புகைப்படங்கள், தலைப்பு செய்திகள், லைவ்களில் காணாத அவரை எங்கே என்று தேடினால், பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் அவருடைய பண்ணை வீட்டில் தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆன்லைனில் பேசி வரும் அவருடைய புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஷேவ் செய்யாத ஒரு வார வெள்ளை தாடி, முறுக்கு மீசை என கம்பீரமாக தோற்றம் தருகிறார் டிடிவி தினகரன். அவருடைய புகைப்படங்களை தற்போது அக்கட்சியின் தொண்டர்கள், இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“