/tamil-ie/media/media_files/uploads/2022/12/Udhayanidhi-Kovai-visit.jpg)
உதயநிதி ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக கோவை சென்ற நிலையில், அவரை காண ஏராளமானோர் திரண்டதால் கோவை மாநகரமே போக்குவரத்து நெரிசலில் திணறியது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) ஒரு நாள் பயணமாக கோவை சென்றார். அங்கு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: விளையாட்டுத் துறை கோரிக்கைகளுக்கு என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்: கோவையில் உதயநிதி உறுதி
முன்னதாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க 3,000-க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் திரண்டதால் கோவை மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபாலபுரம் முதல் கோவை ரயில் நிலையம் வரை தி.மு.க தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்ததால், காலை 10.30 மணி முதல் ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பல பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே அல்லது வெளியே செல்ல முடியாமல் கூட்ட நெரிசலால் காத்திருந்தனர்.
கோவை லட்சுமி மில்ஸ் மற்றும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் அருகேயும் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மாவட்ட ஆட்சியரகம் அருகே போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த வழியாக உதயநிதி ஸ்டாலின் செல்லும் போது மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்றும், போக்குவரத்து காவலர்கள் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.