திருச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு: ரூ50000 ரொக்கத்தை வெளியே தூக்கிப்போட்டு ஊழியர்கள் எஸ்கேப்

திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வெளியே தூக்கிப்போட்டு எஸ்கேப் ஆன ஊழியர்கள்

திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வெளியே தூக்கிப்போட்டு எஸ்கேப் ஆன ஊழியர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruverumbur Sub registrar office

திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வெளியே தூக்கிப்போட்டு எஸ்கேப் ஆன ஊழியர்கள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்ச பணம் கை மாறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீஸ் சோதனையில் ஈடுபட்டபோது ஜன்னல் வழியே பணத்தை தூக்கிப்போட்டு ஊழியர்கள் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின்போது 50 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதால் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment
publive-image

திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாறப் போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: அன்பில் மகேஷ் வெற்றியில் இவருக்கு பங்கு உண்டு: திருச்சி பிரமுகரை புகழ்ந்த உதயநிதி

Advertisment
Advertisements

அப்போது, அலுவலகம் உள்ளே இருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி எரிந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக அந்த பணத்தை கைப்பற்றினர். இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த துவரங்குறிச்சி பொறுப்பு பதிவாளர் இந்துகுமார் உட்பட ஊழியர்களிடம் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் அறியப்பட்டதால், சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ஐம்பதாயிரம் கைப்பற்றது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

publive-image

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டு திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: