ஹாய் கைய்ஸ் : இப்போ மாணவர் தலைவர்...நாளை இந்த மாநிலத்துக்கேவா....
Hi guys : இந்தியா-அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன்
Hi guys : இந்தியா-அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன்
ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போயிருவோம்...
Advertisment
மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தில், விஜய் மாணவர் தலைவராக நடிக்கிறாராம். மாஸ்டர் படம் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படம் கல்வி தொடர்பான விஷயத்தை பேச இருக்கிறது. இதில் விஜய் செயிண்ட் ஜெபரீஷ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் படிக்கிறார். மாணவர்கள் தலைவராகவும் இருக்கிறார். வெளியில் இருந்து மாணவர்களை போதை மருந்துக்கு அடிமை ஆக்கியும், ஜாதி வாரியாக பிரித்து மோத விட்டும் வில்லத்தனம் செய்யும் முன்னாள் மாணவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த இருவருக்கும் இடையிலான மோதல் தான் படம் என்கிறார்கள் விபரம் அறிந்தோர்.
மாஸ்டர்...ஹெட் மாஸ்டர்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் புஷா கிருஷ்ணா, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இது பற்றி புஷா கிருஷ்ணா கூறுகையில், இந்தியா-அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன். எந்த வேலையை துவங்குவதற்கு முன்பும் அவரது படத்தை வைத்து வழிபட்ட பிறகு துவங்குவது எனது வழக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகையை முன்னிட்டு, தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகரில், கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. டிரம்ப், தன் மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதையொட்டி, அந்நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
நடக்கட்டும் நடக்கட்டும்.
இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் 5 கோடி ரசிகர்கள் பின்பற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். இந்த பட்டியலில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (4.99 கோடி) இரண்டாம் இடத்திலும், தீபிகா படுகோனே (4.41 கோடி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
வெல்டன் கோலி
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்.