New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Untitled-1-1.jpg)
அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு காவல் நிலையத்திலேயே சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அல்லகட்டா பகுதியில் குற்றத்தை குறைப்பதற்காக அந்தப் பகுதி காவல் நிலையத்தில் போலீஸார் சிறப்பு பூஜை நடத்தி பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
அல்லகட்டா பகுதியில் சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரையும் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமிகளை கடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வந்தன.
இதைத் தொடர்ந்து ஊரில் நல்லது நடக்க வேண்டும் என்றால் சிறப்பு ஹோமமும், பூஜையும் நடத்தப்பட வேண்டும் என்று உள்ளூர் பூசாரிகள் காவலர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கின்றனர்.
எனவே, அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு காவல் நிலையத்திலேயே சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கூட காவலர்கள் வணங்கியிருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: ஓ.. இவரு தான் புது ஆட்டக்காரரோ?!… இணையத்தை கலக்கும் ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு’ மீம்ஸ்!
இந்த சிறப்புப் பூஜையின் பலனாக சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று போலீஸார் நம்புகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை தொடர்பான வீடியோ யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டம்-ஒழுங்கை தங்களது சீரிய செயல்பாடுகளால் காப்பாற்ற வேண்டிய காவலர்கள் மூட நம்பிக்கையுடன் இருக்கலாமா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் அந்தக் காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். எனினும், காவலர்கள் இதுகுறித்து மெளம் சாதித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.