பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவி ரிடாவை திருமணம் செய்துக் கொள்ள இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைப்பெற்ற பாஜக கூட்டத்தில் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பிரதமர் மோடி கலந்துக் கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் அவரை அருகில் பொதுமக்கள் கூரை மேல் ஏறி நின்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி ஆணையிட்டார். பின்பு படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது மேற்கூரை இடிந்த விபத்தில் காயம் அடைந்த ரிடா என்ற மாணவியை மோடி அருகில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
அதற்கு அந்த பெண் மோடியிடம், “உங்களை இவ்வளவும் அருகில் பார்த்தது மிகவும் மகிச்சி. எனக்கு ஆட்டோகிராஃப் போட்டு தருவீர்களா? என்று கேட்டுள்ளார். நெகிழ்ச்சியில் மோடி, உடனே அருகில் இருந்த பேப்பரில் பேனாவை எடுத்து ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.இதன் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
வைரலான வீடியோவை இங்கே பார்க்கவும்
இதையடுத்து ரிடா அந்த பகுதி முழுவது வைரல் பெண்ணாக வலம் வர தொடங்கி விட்டார். மோடி ஆட்டோகிராப்போட்ட பேப்பருடன் ரிடா சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட போட்டோக்களுக்கு லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரிடாவை திருமணம் செய்துக் கொள்ள இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பதாக ரிடாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.