scorecardresearch

கோவை: பூந்தொட்டிக்குள் படம் எடுத்த பாம்பு; லாவகமாக பிடித்த ஸ்நேக் அமீன்

கோவையில் பூ தொட்டிக்குள் ஒளிந்திருந்த நாகபாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது; வைரல் வீடியோ

snake
பூ தொட்டிக்குள் ஒளிந்திருந்த நாகபாம்பு லாவகமாக பிடித்த ஸ்நேக் அமீன்

கோவை போத்தனூர் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூ தொட்டியில் ஒளிந்திருந்த பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது.

கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூ தொட்டிக்குள் நாகபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அவ்வீட்டார் கிரீன்கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் அந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பிடிப்பட்ட அந்த பாம்பு சுமார் நான்கரை அடி இருந்துள்ளது. இதனை பார்த்து அவ்வீட்டார் உட்பட அக்கம்பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையும் படியுங்கள்: கோவை: இரவில் வீட்டுக் கதவை உடைத்து நுழைய முயன்ற யானை- வீடியோ

பின்னர் பிடிப்பட்ட பாம்பு பெரியகுளம் மேற்கு கரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது. கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் பாம்புகள் உட்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் தொடர்ந்து குளிர்ச்சியான இடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது அதிகரிக்க துவங்கி உள்ளது. இப்பகுதியிலேயே கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

குழந்தைகள் அனைவரும் மாலை நேரங்களில் விளையாடி கொண்டிருப்பதாலும், அடுத்த வாரத்தில் இருந்து எல்லாம் பள்ளி விடுமுறை விடப்படுவதால் குழந்தைகள் அனைவரும் அதிக நேரம் அப்பகுதியில் விளையாடுவர், வீட்டில் இருப்பர் என்பதாலும் குடியிருப்பு பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பி.ரஹ்மான் கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Kovai snake man catch cobra from flower pot viral video

Best of Express