/tamil-ie/media/media_files/uploads/2022/09/child-and-teacher.jpg)
ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் குழந்தைகளுடன் ஒரு சிறப்புப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, அவர்களைச் சரியான பாதையில் அழைத்துச் செல்வது முதல் அறிவுரை கூறுவது, கவனித்துக் கொள்வது வரை குழந்தையின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
ஒரு ஆசிரியருக்கும் குழந்தைக்கும் இடையேயான அபிமானமான உரையாடலைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் அந்த வீடியோ ஆன்லைனில் இதயங்களை வென்றுள்ளது. சிறுவனின் கீழ்ப்படியாமையால் ஆசிரியர் கோபமடைந்ததாகத் தெரிகிறது, மேலும் வீடியோவில் குழந்தை தனது பாசத்தை மீண்டும் பெற கடுமையாக முயற்சிக்கிறது.
இதையும் படியுங்கள்: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியக் கொடியை ஏந்தி நின்ற அஃப்ரிடி மகள்: ஏன் தெரியுமா?
திங்களன்று சப்ராஜிலாவால் ட்வீட் செய்யப்பட்ட கிளிப், ஒரு குழந்தை தனது ஆசிரியரை ஆறுதல்படுத்த முயற்சிக்கும் வகுப்பறையில் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டுகிறது. ஆசிரியர் இந்தியில், “நீங்கள் அதைச் செய்ய மாட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் செய்கிறீர்கள். நான் உன்னிடம் பேசமாட்டேன். மீண்டும் செய்யமாட்டேன் என்று ஒருமுறை சொன்னீர்கள், ஆனால் செய்தீர்கள்,” என்று கூறுகிறார். மனம் வருந்தியபடி, சிறுவன் அவரைக் கட்டிப்பிடித்து, தன் செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று அவளிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறான். மன்னிப்புக் கேட்டு, இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று உறுதியளித்து, பலமுறை முத்தமிட்டான். சிறுவன் அவளிடம் அன்பைப் பொழிந்தபோது, ஆசிரியர் இறுதியாக ஒப்புக்கொண்டு அவருக்கு ஒரு முத்தம் கொடுக்கிறார்.
ऐसा स्कूल मेरे बचपन में क्यों नहीं था 😏😌 pic.twitter.com/uz07dvlehb
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 12, 2022
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்களில் பெரும் பகுதியினர் இந்த வீடியோ மிகவும் இனிமையாக இருப்பதாகக் கண்டு, குழந்தைக்கு தாயாக இருந்ததற்காக ஆசிரியரைப் பாராட்டினர். இருப்பினும், ஆசிரியர்-மாணவர் தொடர்புக்கு வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு அல்ல என்று சிலர் சுட்டிக்காட்டினர்.
”இது துன்புறுத்தல். இதே போல் ஒரு ஆண் ஆசிரியர் பெண் குழந்தைக்கு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா? பிறகு ஏன் இதை ஏற்க வேண்டும்?” என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
This is pure harassment. Would you accept if similar thing is done by a male teacher to a girl child? Then why is this acceptable?
— सनातनी 🇮🇳 🚩 中国是病毒 (@kiloandy) September 12, 2022
”பாலினத்தைத் திருப்பி, சீற்றத்தைப் பாருங்கள். பாவப்பட்ட ஆசிரியர் சிறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியாது” என மற்றொருவர் ட்வீட் செய்துள்ளார்.
Just reverse the gender and see the outrage. The poor teacher could not have come out of jail.
— Piyush Khandelwal 🇮🇳🇿🇦 (@piyush1062) September 12, 2022
அதேநேரம், “ஆசிரியர் ஒரு அற்புதமான பெண்மணி. அப்பாவி இதயமுள்ள குழந்தைகளை இவ்வளவு அக்கறையுடனும் அன்புடனும் நடத்தும் ஆசிரியர்களுக்கு மரியாதை. ஒரு குழந்தை தனது சொந்த தாயுடன் ஒரு ஆசிரியருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களால் மதிப்புகளையும் கல்வியையும் கற்றுக்கொள்ள முடியும்,” என ஒரு ட்விட்டர்வாசி ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
The teacher is a magnificient lady. Respect for such Teachers who treat innocent hearted kids with such care and love. When a kid relates a teacher with their own mother that is when they can learn values and education.
— Anil Kadel (@Anilkadel_8) September 12, 2022
”எல்லோரும் ஏன் தவறான கண்ணால் பார்க்கிறார்கள்? பையனுக்கு தன் டீச்சரை ரொம்ப பிடிக்கும் போலும், அவர்களுக்கிடையேயான பிணைப்பை இங்கு பார்க்கிறோம்... இப்படி தவறாக பேசும் நாம் அனைவரும் தப்பு தான். அவர்கள் இருவருக்குமான உரையாடல் ஆசிரியர் மாணவர் போலல்லாமல் ஒரு தாயும் குழந்தையும் போல இருந்தது” என மற்றொரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.
Why is everyone seeing through the wrong eye? The boy seems to like his teacher very much and we see the bonding between them here... All of us who speak in such a wrong way are a mistake. The conversation between the two of them is like a mother and child, unlike the teacher std
— Chindhuprasad🇮🇳 (@Chindhuprasad) September 13, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.