New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a10.jpg)
அதில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்
அதன் வாலைப் பிடித்து வெளியே இழுத்த போது தான் அது 10 அடி நீளமுள்ள பாம்பு என்பது தெரியவந்தது
அதில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்
Tamil Viral Video: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் டாய்லெட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மிரந்தா ஸ்டீவர்ட். இவர் தனது அறையிலுள்ள டாய்லெட்டில் தண்ணீர் ஃபிளெஷ் செய்ய முயன்ற போது, தண்ணீர் நிரம்பியிருக்கும் ஃபிளஷ் பெட்டியில் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தார்.
நகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு?
பின்னர் அதைத் திறந்து பார்த்த போது, அதில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது நண்பர் ஓருவருக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்டீவர்டின் நண்பர் டாய்லெட்டுக்குச் சென்று பாம்பு இருப்பதை உறுதி செய்தார். பின்பு, 40 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக அதன் வாலைப் பிடித்து வெளியே இழுத்த போது தான் அது 10 அடி நீளமுள்ள பாம்பு என்பது தெரியவந்தது.
இதனை வீடியோ எடுத்த ஸ்டீவர்ட், தனது இன்ஸ்டாகிராமிலும், சமூகவலைதளங்களிலும் பதிவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.