பற்றி எறிந்த வீடு! 3வது மாடியில் இருந்து குதித்த சிறுவர்கள் (வீடியோ)

குழந்தைகளை பத்திரமாக மீட்க கீழே நின்றிருந்த 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது

குழந்தைகளை பத்திரமாக மீட்க கீழே நின்றிருந்த 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பற்றி எறிந்த வீடு! 3வது மாடியில் இருந்து குதித்த சிறுவர்கள் (வீடியோ)

இரண்டு குழந்தைகளும் அலறுவதை நான் கண்டேன்

Tamil Viral Video: பிரான்ஸ் நாட்டின் க்ரனோபிள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அப்போது அந்த மாடியின் வெளியே ஒரு சிறிய குழந்தை வெளியே குதிக்க, அந்த குழந்தையை நின்றிருந்த மக்கள் பத்திரமாக பிடித்து காப்பாற்றினர்.

Advertisment

தொடர்ந்து இன்னொரு சிறுவன் மேலே இருந்து குதிக்கிறான். அவனையும் அந்த அங்கிருந்தவர்கள் பிடித்து காப்பாற்றுகின்றனர். இப்படியாக முடியும் வீடியோ, காண்போரை ஒரு நொடி அதிர வைத்தது.

சிடிவி செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த குழந்தைகளுக்கு முறையே 3 மற்றும் 10 வயது ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டில் இருவரையும் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தில் வீட்டிற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வணக்கம் வைக்குற தம்பி, நீ எல்லாம் நல்லா வருவடா – வைரல் வீடியோ

Advertisment
Advertisements

ஒரு கட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரியவே, என்ன செய்வது என்று தெரியாமல் இரு குழந்தைகளும் திகைத்துள்ளன. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரும் ஜன்னல் வழியாக கீழே குதிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். முதலில் தன் தம்பியை கீழே போட்டுவிட்டு, பின்னர் அவனும் குதித்துள்ளான்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், குழந்தைகளை பத்திரமாக மீட்க கீழே நின்றிருந்த 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் தீ விபத்தினால் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அந்த இளைஞர் கூறுகையில், "இரண்டு குழந்தைகளும் அலறுவதை நான் கண்டேன். அவர்கள் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னலில் அருகே இருந்தார்கள். கட்டிடத்திற்குள் நிறைய புகை, தீப்பிழம்புகள், வெடிப்புகள் இருந்தன. குழந்தைகள் பயந்தார்கள். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்" என்று அந்த திகிலான தருணத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நகர நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: