/indian-express-tamil/media/media_files/2025/04/12/02FRP1tK74B9EsO4799p.jpg)
/indian-express-tamil/media/media_files/lSoDctN7cPoKTARaO6aB.jpg)
தினமும் ஏன் மோர் குடிக்க வேண்டும்?
புளித்த பால் பொருள்கள் என்று வரும் போது, மோர் ஒரு சிறந்த சூப்பரான மற்றும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இந்த தயாரிப்பு ஆனது பல்துறை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பால் பானமாகும். இது சுவையானது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதன் ஊட்டச்சத்து செரிமான ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் என பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
/indian-express-tamil/media/media_files/A3bX7Tb6Wx28hSQWowEk.jpg)
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மோர் ஒரு சிறந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். இது புரதத்தின் குறைந்த கொழுப்பு மூலமாகும். இவை செல் பழுது மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது. கூடுதலாக, மோர் ஆனது பி12, ரிபோஃப்ளேவின் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்களைக் கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்கவும், நரம்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/YtaZjXpgJiRf2f7xYNaM.jpg)
உடல் எடையைக் கட்டுப்படுத்தும் மோர்!
உடல் எடையைக் கட்டுப்படுத்த மோர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மோரில் நிறைந்துள்ள புரதம் முழுமை உணர்வுக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/jrsF0ksLGhNzQDmiZAl2.jpg)
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
உணவில் மோர் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நேர்மறையான விளைவுகளைத் தருகிறது. மோரில் நிறைந்துள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் சோடியத்தின் விளைவுகளை எதிர்ப்பதன் மூலம் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, மோரில் உள்ள புரோபயாடிக்குகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/digestion_759.jpg)
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
மோரில் லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் மற்றும் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. எனவே உணவுக்குப் பின் ஒரு கிளாஸ் மோர் உட்கொள்வது வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/x43pJB7HEKiwlovroQQb.jpg)
நீரேற்றமிக்க பானம் மோர்
மோர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானமாகச் செயல்படுகிறது. மேலும் இதன் நீர்ச்சத்து, பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உடலின் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக வெப்பமான காலநிலையில் அல்லது உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு மோர் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும் மற்றும் இது நீரிழப்புக்கு நிவாரணம் தருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/25/w8OYOY0n7xeF5cCWau3T.jpg)
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
மோர் உட்கொள்வது சருமத்தின் உட்புறங்களிலிருந்தும் மிகுந்த நன்மை பயக்கும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்பட்டு, இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, மென்மையான நிறத்தைத் தருகிறது. மேலும் இவை முகப்பருவைக் குறைக்கவும், கறைகளை குறைக்கவும், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரவும் உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.