செலவே இல்லாமல் வயிறு இயற்கையாக சுத்தம் செய்ய வழி: டாக்டர் பிள்ளை சொல்லும் சுகபேதி முறை

பல நோய்களுக்கு வயிறு பிரச்னைதான் காரணமாக இருக்கிறது அதனால், வயிறை இயர்கையான வழிமுறையில் சுத்தம் செய்யும் சுகபேதி முறையை டாக்டர் பிள்ளை பரிந்துரைக்கிறார்.

பல நோய்களுக்கு வயிறு பிரச்னைதான் காரணமாக இருக்கிறது அதனால், வயிறை இயர்கையான வழிமுறையில் சுத்தம் செய்யும் சுகபேதி முறையை டாக்டர் பிள்ளை பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dr pillai

இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்யும் வழிமுறை குறித்து டாக்டர் பிள்ளை தனது ஆஸ்க் டாக்டர் பிள்ளை தமிழ் (Ask Doctor Pillai Tamil) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பல நோய்களுக்கு வயிறு பிரச்னைதான் காரணமாக இருக்கிறது அதனால், வயிறை இயர்கையான வழிமுறையில் சுத்தம் செய்யும் சுகபேதி முறையை டாக்டர் பிள்ளை பரிந்துரைக்கிறார்.

Advertisment

இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்யும் வழிமுறை குறித்து டாக்டர் பிள்ளை தனது ஆஸ்க் டாக்டர் பிள்ளை தமிழ் (Ask Doctor Pillai Tamil) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

வயிறு பிரச்னைதான் பலநோய்களுக்கு காரணம், அதனால், வயிறை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வயிறை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் இயற்கை முறையில் செலவே இல்லாமல் வயிறை சுகபேதி மூலம் சுத்தம் செய்யலாம் என்று டாக்டர் பிள்ளை கூறுகிறார்.

Advertisment
Advertisements

சுகபேதி முறையில் வயிறை சுத்தம் செய்ய் முதலில் நீங்கள் ஒரு விடுமுறை நாளைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு முன்தின நாள் இரவு, நீங்கள் ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், 2 டேபிள்ஸ்பூன் கல் உப்பு போட்டு மிதமான தீயில் 30 நிமிடம் கொதிக்க வையுங்கள். பிறகு, அதை மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில் 7-8 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுங்கள். அந்த தண்ணீரை மீண்டும் கொஞ்சம் வெதுவெதுப்பாக சூடு பண்ணுங்கள். அதில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கி 1 அல்லது 1 1/2 டம்பளர் குடித்து விடுங்கள். சில நிமிடங்களில் பேதி ஆகும். 

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு டம்பளர் குடியுங்கள். மீண்டும் பேதி ஆகும். இப்போது, நீங்கள் குடிக்கிற தண்ணீர் அப்படியே பேதி ஆனால், அந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்தி விடுங்கள். உங்கள் வயிறு சுத்தம் ஆகிவிட்டது. சிலருக்கும் மொத்த தண்ணீரைக் குடித்தாலும் பேதி அழுக்காக வெளியேறுகிறது என்றால் அவர்கள், இன்னொரு நாளைக்கு மீண்டும் குடிக்கலாம். 

இந்த தண்ணீரை ஒருமுறை மட்டும் குடித்துவிட்டு விட்டுவிடாமல், ஒரு வாரம் கழித்து குடிக்க வேண்டும். அடுத்து ஒரு மாதம் கழித்து குடிக்க வேண்டும். அடுத்து 3 மாதம் கழித்து குடிக்க வேண்டும். அடுத்து 6 மாதம் கழித்து குடிக்க வேண்டும். அடுத்து 1 வருடம் கழித்து குடிக்க வேண்டும். அடுத்து 3 ஆண்டுகள் கழித்து குடிக்க வேண்டும். அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேதிக்கு சாப்பிட்டால் போதும் என்று டாக்டர் பிள்ளை ஆலோசனை வழங்குகிறார்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: