hdfc atm : வங்கி நிறுவனங்கள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்து வருகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கூடுதலான பணத்தினை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க வேண்டும் என்றால் கார்டின் வகையினை மாற்றுவது நல்லது.
எனவே இந்தியாவின் டாப் 3 வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
hdfc atm : எச்டிஎப்சி வங்கி தங்களது பிளாட்டினம் சிப் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
axis atm : ஆக்சிஸ் வங்கி தங்களது ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுகளில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. இதுவே விசா டைட்டானியம் கார்டுகள் என்றால் ஒரு நாளைக்குக் 50,000 ரூபாய் வரை பணம் எடுக்க முடியும்.
பிரபல வங்கியின் மிகச் சிறந்த அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி!
icici atm : ஐசிஐசிஐ வங்கியின் பிளாட்டினம் சிப் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு 1,00,000 ரூபாய் வரை எடுக்க முடியும். இதுவே விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு என்றால் 1,50,000 ரூபாய் ஒரே நாளில் ஏடிஎம் மையங்களில் இருந்து பணத்தினை எடுக்கலாம்.
எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் பாஸ்புக் வாங்க சிரமப்படவே வேண்டாம்! இதோ ஈஸி வழி.