Azhagu Serial on Sun TV : சீரியல்களை தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாக்கிய சன் டி.வி தற்போது பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் முக்கியமானது ‘அழகு’.
அழகு சீரியலில் அழகம்மையாக வரும் ரேவதி, பல வாரங்களுக்குப் பிறகு விஜயம் செய்திருக்கிறார். ஊரிலிருந்து வரும் அவர், மகள் வயதில் இருக்கும் மற்றொரு பெண்ணையும் அழைத்து வருகிறார். மல்லிகா என்ற அந்த பெண் வீட்டுக்கு வந்ததுமே ஆரத்தி எடுக்கும்படி, அழகம்மையின் மருமகள்களிடம் கடிந்து கொள்கிறாள். யார் என்ன என்று விசாரிக்க, என்னை பழனிச்சாமி (அழகம்மையின் கணவர், தலைவாசல் விஜய்) இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொண்டார் என்கிறார்.
Advertisment
Advertisements
அழகம்மையின் குடும்பமே அதிர்ச்சியில் உறைகிறது. அழகம்மையும், பழனிச்சாமியும் தலை குனிந்து நிற்கிறார்கள். என்ன ஏதென்று மகன்கள் குதிக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள் அழகம்மையும், பழனிச்சாமியும். மல்லிகா மொத்த குடும்பத்தையும் பார்வையாலே மிரட்டுகிறார். போதாக்குறைக்கு வீட்டுப் பக்கத்தில் இருப்பவர்கள், கடைக்குப் போன இடத்தில் என அனைவரிடமும், அழகம்மையின் ஒப்புதலோடு, பழனிச்சாமி தன்னை திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறுகிறாள்.
இதனால் கோபமான பழனிச்சாமி அவளை கழுத்தை நெரிக்கிறார். அழகம்மை தடுத்து, மல்லிகாவை காப்பாற்றுகிறார். ’எல்லாம் சரியாகிடும், இவ யாரு இவ நோக்கம் என்னன்னு நா ஊருக்கு போய் விசாரிக்கிறேன். நீங்க தைரியமா இருங்கன்னு’ பழனிச்சாமிக்கு தைரியம் கூறுகிறார். குடும்பத்தில் எல்லோரும் முகத்தைக் காட்ட, ’எனக்கு எதாச்சும் ஆனா, நீங்க எல்லாரும் உள்ள போய்டுவீங்க’ என மிரட்டுகிறாள் மல்லிகா. இந்நிலையில், யாரோ அவளை கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள். மல்லிகா யார்? அவளைக் கொன்றது யார்? என்ற கேள்விக்கு இனி வரும் எபிசோட்களில் பதில் தெரிந்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"