இந்த பூட்டுதல் மக்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் நடிகை குஷ்புவும் ஒருவர். உடல் மெலிந்து, படு அழகாக மாறியிருக்கிறார். அதற்காக முடக்கத்தை அவர் பாராட்டுகிறார்.
சல்பேட்டா பரம்பரை: வைரலாகும் பா.ரஞ்சித் பாக்ஸர் லுக் படம்!
,
“எனது மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை என்னிடம் பலர் கேட்கிறார்கள். பூட்டப்பட்டதைக் குறை கூறலாம்... 70 நாட்களுக்கு எந்த உதவியும் இல்லை... வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் ஒரே ஆளாகச் செய்தேன். துப்புரவு, தூசி சுத்தம் செய்தல், துடைத்தல், உணவு சமைத்தல், சலவை செய்தல், தோட்டம் பராமரித்தல் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் என அனைத்து வேலைகளையும் நானே செய்தேன். அதோடு ஒர்க் அவுட்டும் (யோகா + பிளாங்) முக்கிய பங்கு வகித்தது. தவிர, நான் பெரியளவு உணவு உண்பவள் அல்ல” என்று ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார் குஷ்பூ.
அதோடு நடிகை சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு சில செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொண்டார். “வலியால் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரு புன்னகை ஒவ்வொரு அப் அண்ட் டவுனுக்கும் உதவும். உங்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை.. உங்கள் உடல்நலம், உங்கள் மகிழ்ச்சி.. ஒரு ஆரோக்கியமான இதயம், ஆரோக்கியமான மனம் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.. சிரித்தபடி இருங்கள்” என்று அந்தப் படங்களுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார்.
குடும்பமே கைவிட்டாலும் வனிதாவின் முயற்சி கைவிடவில்லை! மகள்களுக்காக தான் இத்தனையும்.
இதற்கிடையில், இயக்குநர் சிவாவின் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். சமீபத்தில், ஸ்டெப்ஸ் (தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்) பொதுச் செயலாளராக, சுஜாதா விஜயகுமார் (ஸ்டெப்ஸின் தலைவர்) மற்றும் ஆர்.கே.செல்வமணி (தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்) ஆகியோருடன் ஒரு சீரியல் ஸ்பாட்டை விசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”