Naam Iruvar Namakku Iruvar : 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் மாயன் தங்கையின் தட்டில் நிறைய இட்லியை அடுக்குங்கள் என்று சொல்கிறான். தெனாலிராமன் படத்தில் வடிவேலு டைனிங் டேபிளில் உட்கார்ந்துக்கொண்டு கிள்ளி சாப்பிடாதீர்கள் நன்றாக வயிறு புடைக்க புடைக்க அள்ளி அப்புங்கள் என்று சொல்வார். அதுபோல இங்கு மாயன் உட்கார்ந்துக்கொண்டு இட்லி பரிமாறி வரும் மாமாவிடம் வேணாம்னு சொன்னா அப்படியே விட்டுடறதா, நிறைய இட்லி வைங்க மாமா என்று சொல்கிறான்.
புகை பிடிப்பவர்களை கொரோனாவுக்கும் ரொம்ப புடிக்குமாம்
தங்கை ஆனந்தியும், மைத்துனன் கார்த்திக்கும் கல்யாணத்துக்கு முன்னாலேயே தப்பு செய்து, கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில் கர்ப்ப வாந்தி எடுக்கிறாள் ஆனந்தி. இப்போ மூணு மாசம்னு சொல்றாங்க. இந்த கோபத்தில் மாயனின் அப்பா, அம்மா, யாருமே ஆனந்தியுடன் பேசுவதில்லை. அவளும் அண்ணி தேவியிடம் மட்டுமே பேசிக்கொண்டு தனியாக இருக்கிறாள். இந்த சமயத்தில் தான் வீட்டில் எல்லாரையும் உட்கார வச்சு மாமனார் பரிமாறுகிறேன் என்று சாப்பாட்டு பாத்திரங்களை கையில் எடுத்துகிட்டார்.
தேவி, அரவிந்த், தாமரை, மாயன், ஆனந்தி, தாத்தா எல்லாரும் உட்கார்ந்து இருக்க மாமா இட்லி வைக்கிறார். ஆனந்தி ஒரு இட்லியோடு போதும் மாமா என்று சொல்ல, அவரும் வேறு தட்டுக்கு பரிமாற சென்றுவிட்டார். மாயன் வேணும்னே.. தேவி செல்ஸ் என்று தேவி செல்லம் என்பதை சுருக்கி கூப்பிடுகிறான். ஏன் இட்லி போதும் போதும்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி ஆரோக்கியமா இருக்கறது? இட்லி மாதிரி உங்க கன்னம் தான் அழகு.. அது குறைஞ்சுட போகுது. இன்னும் இட்லி வச்சுக்கோங்க என்று தங்கைக்கு இட்லி வைப்பதை ஜாடையா சொல்ல, மாமனார் விழிக்கிறார்.
ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் என்னை போருக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு மருத்துவர் வேண்டுகோள்!
மாமா யார் தட்டில் இட்லி கம்மியா இருக்குதோ, அவங்கத் தட்டில் நிறைய இட்லி வைங்க மாமான்னு சொல்றான். மாயன் என்னதான் தேவியின் முந்தானை பிடிச்சுக்கிட்டு சுத்திகிட்டு இருந்தாலும் தங்கச்சி மேல பாசக்கார பய புள்ளையாச்சே!
Vijay TV Serial: பெரிய அத்தை... சின்ன அத்தை... மாமா எந்த ரூமில்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"