Vijay TV, Aranmanaikili Serial : சின்னத்திரை பிரபலம் நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். சீரியலில் குணச்சித்திரம், கதாநாயகி, வில்லி என அனைத்து வகையான ரோல்களிலும் நடித்து விட்டார். அதோடு வெள்ளித்திரையிலும் குணச்சித்திரம் மற்றும் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வுக் குழுவில் இந்தியர்
சமீபத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைகிளி’ சீரியலில் ஹீரோ அர்ஜூனின் பெரியம்மா மகளாக துர்கா, என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சித்தி மீனாட்சியையும், அவரது மகன் மாற்றுத்திறனாளி அர்ஜூனையும் ஏமாற்றி எப்படியாவது அந்த சொத்துக்களை கைப்பற்றிவிட வேண்டும் என பல்வேறு வில்லத்தனங்களை செய்வார் துர்கா.
சீரியலுக்கு தான் பை, இன்ஸ்டாவுக்கு இல்ல : நீலிமா ராணியின் கலர் ஃபுல் படங்கள்!
இந்நிலையில் தற்போது அரண்மனைகிளி சீரியலில் இருந்து வெளியேறியிருக்கிறார் நீலிமா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ”கேமரா முன்பு மிகவும் மகிழ்ச்சியான ஆளாக இருப்பேன். குழந்தையில் இருந்தே நடித்து வருகிறேன். ஆனால் தற்போது என் வாழ்க்கை சில மாற்றங்களை டிமாண்ட் செய்கிறது. அதை நான் மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்கிறேன். பை பை துர்கா... துர்கா ரோலை மிஸ் செய்வேன். ரசிகர்கள் அல்லது நண்பர்கள், யாராக இருந்தாலும் நீங்கள் தான் என்னுடைய பலம். என்னை வாழ்த்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஆடியோ லாஞ்சில் காணாமல் போன ஆண்ட்ரியா : ரெட் ஹாட் யாஷிகா – படத் தொகுப்பு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.