பல ஆண்டுகள் கழித்து கர்ப்பமான தனம்!

தனத்திற்கு தலை சுற்றலும், வாந்தியும் வந்ததால் தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்யும் கிட்டை மருந்து கடைக்கு சென்று வாங்கி வருகிறாள்.

தனத்திற்கு தலை சுற்றலும், வாந்தியும் வந்ததால் தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்யும் கிட்டை மருந்து கடைக்கு சென்று வாங்கி வருகிறாள்.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Vijay TV Pandian Stores

Tamil Serial News, Vijay TV Pandian Stores

Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டுக்குடும்ப விரும்பிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் இது. தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.

‘நான் ராமநாதபுரத்து பொண்ணாக்கும்’: ’பாக்கியலட்சுமி’ ஜெனிபர்!

Advertisment

முதல் தம்பி ஜீவா-மீனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், தனம் குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கான காரணம் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகிறார்கள். மூர்த்தியின் அம்மா லட்சுமி, பயங்கர கோபமாகிறார்.

இந்நிலையில் தனத்திற்கு தலை சுற்றலும், வாந்தியும் வந்ததால் தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் கருத்தரிப்பு பரிசோதனை செய்யும் கிட்டை மருந்து கடைக்கு சென்று வாங்கி வருகிறாள். வீட்டிற்கு வந்ததும் தனக்கு தலைவலி என கூறி தூங்கச் செல்கிறார். தனக்கு ஏன் இப்படி ஆகிறது, வேறு ஏதாவது நோயாக இருக்குமோ என யோசித்து வருத்தத்தில் இருக்கிறாள்.

மீனாவையும், ஜீவாவையும் தூங்க விடாமல் இரவு முழுவதும் குழந்தை அழுகிறது. ஆனால் தனம் குழந்தையைப் பார்ப்பதில்லையே என மீனா வருத்தப்படுகிறாள். பிறகு தனத்திற்கு மீண்டும் தலை சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுக்கிறார். அதை பார்த்த கதிர் மருத்துவமனைக்கு தனத்தை அழைக்கிறார். அதற்கு அவர் இது வெறும் பித்தம் தான் என கூறி தவிர்க்கிறார்.

கோதுமை விதைப்பு முடிந்தது; போராட விவசாயிகளுக்கு நிறைய நேரம் உள்ளது!

Advertisment
Advertisements

குழப்பத்தில் இருக்கும் தனம் அடிக்கடி கோவிலுக்கு போவதாக கூறி விட்டு வெளியில் செல்கிறார். என் குழந்தையை பார்க்க வேண்டும் என்பதற்காகவே தனம் வெளியே போவதாக, முல்லையிடம் குறை கூறுகிறாள் மீனா. தனம் கர்ப்பமாகிய விஷயம் தெரிந்தால், நிச்சயம் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் மீனாவின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: