அப்போ... நீ என்னை காட்டான்னு நினைச்சு இருக்க...

உண்மையை சொல்லவா.. பொய் சொல்லவா என்று புதிர் போடுகிறான் கதிர். நீங்க பொய் கூட சொல்வியளா என்று கதிரை உசரத்தில் வைத்து கேட்கிறாள் முல்லை.

உண்மையை சொல்லவா.. பொய் சொல்லவா என்று புதிர் போடுகிறான் கதிர். நீங்க பொய் கூட சொல்வியளா என்று கதிரை உசரத்தில் வைத்து கேட்கிறாள் முல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Pandian Stores, Mullai Kathir, Tamil serial news, vijay tv serial list, pandian stores promo, kathir mullai romance

Pandian Stores, Mullai Kathir

Vijay TV, Pandian Stores: விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லையும், கதிரும் படுக்கையறையில் உட்கார்ந்து வழக்கம் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன இப்போ கதிர் கொஞ்சம் முன்னேறி முல்லைக்கு நிகராக அவளது பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்து இருக்கான். எப்போதும் முல்லை தான், கீழே வந்து இவனது அருகில் உட்கார்ந்து கதிர் முகத்தை காதலுடன் பார்த்து, அவன் பேசுவதை கேட்டு ஆசையுடன் புன்னகைத்து கதை கேட்பாள்.

Advertisment

தனிமைப்படுத்தப்பட்ட சென்னை: சொந்த ஊருக்கு செல்ல முடியாத தவிப்பில் மக்கள்…

இப்போது கதிர் முல்லையுடன் கட்டிலில் உட்கார்ந்து இருக்கான். ஏங்க.. அம்மா போன் பண்ணினாக... நீங்க நல்லாருக்கியளான்னு கேட்டாக என்று முல்லை அவனிடமிருந்து என்ன பதில் வருதுன்னு ஆசையாய் அவன் முகத்தை பார்த்து சொல்கிறாள்.  அந்த காட்டான் அப்படியேதான் இருக்கான்னு சொல்ல வேண்டியதுதானே என்று செல்லி வம்புக்கு இழுக்கிறான் கதிர். ஏங்க... நான் எப்பங்க உங்களை காட்டான்னு சொன்னேன் என்று முல்லை பொய் கோபம் காட்டுகிறாள்.

Advertisment
Advertisements

சொல்லலை... ஆனா, நினைச்சு இருப்பே இல்லே என்று கதிர் விடுவதாக இல்லை. நினைச்சேன்.. ஆனா, இப்போ இல்லைங்க... அது அப்போ என்று முல்லை சொல்கிறாள். அப்போ என்னை காட்டான்னு நினச்சு இருக்கே என்று சொல்கிறான் கதிர். அதை விடுங்க.. நீங்களும் என்னை பத்தி தப்பாத்தானே நினச்சு இருப்பியன்னு கேட்கிறாள் முல்லை. உண்மையை சொல்லவா.. பொய் சொல்லவா என்று புதிர் போடுகிறான் கதிர். நீங்க பொய் கூட சொல்வியளா என்று கதிரை உசரத்தில் வைத்து கேட்கிறாள் முல்லை. அடி வாங்காம தப்பிக்கணும்னா பொய்தான் சொல்லணும் என்று சொல்கிறான் கதிர். அப்போ உண்மையை சொல்லுங்க என்று மறுபடியும் துருவி துருவி கேட்கிறாள் முல்லை. நீ பெரிய வாயாடின்னு நினைச்சேன்... நீ இந்த வீட்டுக்கு வந்தா வீட்டில் அமைதி இருக்காதுன்னு நினைச்சேன்.. ஆனா, அப்படி இல்லை.. இப்போ பரவால்ல நீ கொஞ்சமாத்தான் பேசறேன்னு சொல்றான் கதிர்.

ஊரடங்கு ஒருபுறம், ஓடிடி மறுபுறம்: இனி சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்?

முதலில் இந்த வீட்டின் அமைதி உன்னால கெட்டுடும்னு நினைச்சேன்... ஆனா, நீ இங்கே வந்த பிறகு தான் தெரியுது.. இந்த வீட்டில் உள்ளவங்களின் நல்லதுக்காக நீ என்னவெல்லாம் செய்யறேன்னு என்று ஒரு கூடை பூவை அவள் முகத்தில் கொட்டியது போல் இவன் பேச, அந்த பூ தனது முகத்தில் அப்படியே விழுந்து அறை எங்கும் மனம் பரப்புவது போல முல்லை முகத்தில் பரவசத்தை காண்பிக்கிறாள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: