/tamil-ie/media/media_files/uploads/2020/12/Tamil-Serial-News-Vijay-TV-Senthoora-Poove-Serial.jpg)
Tamil Serial News, Vijay TV Senthoora Poove Serial
Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’செந்தூரப்பூவே’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி
மனைவியை இழந்த துரை சிங்கம், இரண்டாவது மகள் கயலின் ஆசைப்படி அவளது ஆசிரியை ரோஜாவை திருமணம் செய்துக் கொள்ள முன் வருகிறார். இது மூத்த மகள் கனிமொழிக்கு பிடிக்கவில்லை என்றாலும், பின்னர் சம்மதிக்கிறாள். ஆனால் உங்களுக்கு குழந்தைகள் என்றால் அது நானும் கயலும் தான். இனி ஒரு குழந்தையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது அப்பா, என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறாள்.
அன்புவை காதலித்த ரோஜா அவனோடு வாழ்கிறாள். பின்னர் அவன் இறந்துவிட, அவனது குழந்தை ரோஜாவின் வயிற்றில் வளர்கிறது. அந்தக் குழந்தையை காப்பாற்ற துரை சிங்கத்தை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள் ரோஜா. அதனால் திருமணத்துக்கு சம்மதிக்கிறாள்.
இருப்பினும் இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வில்லத்தனங்களில் ஈடுபடுகிறாள் ஐஸ்வர்யா. திருமணத்துக்குப் பிறகு துரை சிங்கம் - ரோஜாவுக்கு முதலிரவு ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த பந்து பட்டு, பால் கொட்டியதை எண்ணி, தடங்கலாக இருக்கிறதே என துரைசிங்கத்தின் அம்மா வருத்தப்படுகிறார்.
பாலா நிழலில் இருக்கும் ஷிவானி இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?
இதற்கிடையே, கயலும் கனியும் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கயலின் பட்டம் வீட்டின் மேல் மாட்டிக் கொள்கிறது. இதனால் பட்டத்தை எடுக்க முயலும் கயல், சன் ஷேடில் விழுந்து, தொங்குகிறாள். கனியும், பாட்டியும் துடித்துப் போகிறார்கள். கயலை காப்பாற்ற ரோஜா முயல்கிறாள். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வரும் துரை சிங்கம் கயலை காப்பாற்றி விடுகிறார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.