Tamil TV News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் `இரட்டை ரோஜா’. இதில் `பகல் நிலவு’, `கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷிவானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோயின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்துடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஷிவானி.
லாக்டவுனின் 5 கிலோ குறைப்பு: சிக்கென மாறிய விஜே ரம்யா!
இந்நிலையில் கொரோனா வந்து சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது மூன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்புகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், எல்லா சீரியல்களிலுமே நிறைய மாற்றங்கள். சில நடிகைகள் கொரோனா நிலைமை இன்னும் சீராகவில்லை எனச் சொல்லி ஷூட்டிங் வர மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி வர மறுத்தவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர் நடிகைகளைக் கமிட் செய்யப்பட்டுள்ளனர்.
இது ’நாட்டாமை’ சமையல்: லாக்டவுனில் நடந்த ஆச்சர்யம்!
இதற்கிடையே தற்போது ஷிவானியும் ‘இரட்டை ரோஜா’ சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ’சித்து +2’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாந்தினி கமிட்டாகி, படபிடிப்பும் நடந்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு சீரியல் நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படுவதாகவும், அதற்கு உடன் படாத ஷிவானி சீரியலை விட்டே விலகி விட்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சிலரோ, பழைய சேனலில் முன்பிருந்த குழுவினர் புது சீரியலை இயக்கி வருவதாகவும், அதில் ஷிவானி கமிட்டாகியிருப்பதாகவும் கூறுகிறார்கள். எது உண்மையென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”