உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது. இந்த உண்மையை இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பொதுவாக உணவின் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
இப்படியான உணவு பழக்கம் நம் வாழ்க்கை முறையையே மாற்றி பல பிரச்சனைகளை கொண்டு சேர்க்கிறது. அதில் முக்கியமான ஒன்று உடல் பருமன் ஆகும். அதற்கு தீர்வே இல்லை என்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது சோம்பு என்ற இந்த பொருள் உடல் பருமனோடு சேர்த்து பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க துணை புரிகிறது.
- ஜீரக மண்டலத்தை செம்மைப் படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
- உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
- மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
- இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
- நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
- இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
- இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
- உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
- பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
- முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்.
சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
உடல் எடையை குறைக்க உதவும் பானம் செய்ய தண்ணீர் எடுத்து அதில் சிறிது சோம்பு போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.