இன்றைய நவீன உலகில், நம் பாரம்பரிய உணவுகளான கீரைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. கீரைகளை எப்படி வாங்குவது, எப்படி சமைப்பது என்ற அறிவுகூட இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய்விட்டது என மருத்துவர் தில்லை வாணன் தமிழ்ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
பாலை விட கால்சியம் சத்து அதிகம் உள்ள ஒரு கீரையை பற்றி டாக்டர் கூறுவது பற்றி பார்ப்போம். 200 ரூபாய் கொடுத்து ஆப்பிள் வாங்குவதற்கு தயங்காத நாம், 5 அல்லது 10 ரூபாய் மதிப்புள்ள கீரைகளை வாங்கும்போது பேரம் பேசுவது வேதனைக்குரியது. கீரைகள் என்பவை வெறும் உணவுப் பொருள் அல்ல; அவை சத்துக்களின் கூடாரம்.
முருங்கைக்கீரை குறித்து இந்த கட்டுரை விரிவாகப் பேசுகிறது. "முருங்கையை நட்டவன் வெறும் கையோடு நடப்பான்" என்ற பழமொழி, முதுமையிலும் கம்பு ஊன்றாமல் நடக்க உதவும் முருங்கையின் மகிமையைப் பறைசாற்றுகிறது.
இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு இணையான சத்துக்கள், நம் வீட்டு முருங்கைக்கீரையிலேயே உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கைக்கீரையில் உள்ளது.
Advertisment
Advertisements
முழங்கால் வலி உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடி மாத்திரை போட்டுக்கொள்வதற்குப் பதிலாக, முருங்கைக்கீரை சூப் அல்லது ரசம் வைத்து குடிக்கலாம். கேள்வரகு (ராகி) பாலை விட 8 மடங்கு, முருங்கையும் கேள்வரகும் சேர்ந்த அடை பாலை விட 25 மடங்கு அதிக கால்சியம் கொண்டது. ஆனால், வேகமான வாழ்க்கைச் சூழலில் நாம் இந்த பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டோம். அவ்வளவு சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரையில் எப்படி அடை செய்வது எறு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் ராகி மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு அரை டீஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி ஒரு கப் முருங்கைக்கீரை அரை கப் சின்ன வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் எள்ளு கால் கப் தேங்காய் அரை கப் தண்ணீர் நல்லெண்ணெய்
செய்முறை:
ஒரு கப் ராகி மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, தாராளமாக அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி, ஒரு கப் முருங்கைக்கீரை, அரை கப் சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் எள்ளு, கால் கப் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும் .
அரை கப் தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக பிசையவும். மாவு ஒன்றாக சேர்ந்ததும், கொஞ்சூண்டு நல்லெண்ணெயை மேலாகத் தடவி, தட்டு போட்டு மூடி வைக்கவும். பார்ச்மென்ட் பேப்பரில் நல்லெண்ணெய் தடவி பரப்பவும்.
கையில் கொஞ்சூண்டு நல்லெண்ணெய் தடவி, உங்களுக்கு எந்த அளவிற்கு அடை வேண்டுமோ, அதற்கு ஏற்ற மாதிரி மாவு எடுத்து பார்ச்மென்ட் பேப்பர் மேல் வைத்து நன்றாக தட்டவும். மேலாக கொஞ்சம் நல்லெண்ணெய் தடவவும் (அடை காய்ந்து போகாமல் இருக்க).
பார்ச்மென்ட் பேப்பரை மெதுவாக எடுத்தால், அடை எளிதாக வந்துவிடும். நல்லெண்ணெய் சேர்த்து அடை சுடவும். இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை ராகி அடை தயார்.