2 ஏலக்காய், ஒரு கிராம்பு பொடி... இதைச் செய்தா இரவில் தூக்க மாத்திரை வேண்டாம்: டாக்டர் நித்யா

2 ஏலக்காய், ஒரு கிராம்பு பொடி போதும் தூக்க மாத்திரை இல்லாமல் நல்ல தூக்கம் வரும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தூக்கம்

இரவு தூக்கம் வர இயற்கை மருந்து - டாக்டர் நித்யா

நிம்மதியான வாழ்க்கை என்பது நிம்மதியான தூக்கம்தான். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பார்கள். சிலர் இரவு முழுவதும் செல்போன் பார்த்துக்கொண்டே தூக்கத்தை தொலைப்பார்கள்.

Advertisment

ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாவிட்டால், அவர்களுக்கு பல நோய்கள் வந்து சேரும். அதனால், இரவில் செல்போனை வைத்துவிட்டு தூங்க முயற்சி செய்யுங்கள் என்கிறார் நித்யா. மேலும் தூக்கத்திற்கான சில எளிய வழிகள் குறித்து டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  

சிலர் தூங்கும்போதுதான் என்னென்னவோ சிந்தனைகள் ஓடுகிறது. அதனால், தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு உறங்குகிறார்கள். இதனால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அவர்களால் தூக்க மாத்திரை இல்லாமல் இயல்பாக தூங்க முடியாமல் போகிறது. மேலும் தூக்க மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு நாளடைவில் நரம்பு சம்பந்தமான பிரச்சனை, ஹார்மோன்ஸ் பிரச்சனை, தைராய்டு, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வரும். 

Drink This Everyday For Good Night Sleep படுத்த உடனே தூக்கம் வர இத பண்ணுங்க! | Good sleep tips

Advertisment
Advertisements

சரியான தூக்கம் இல்லாவிட்டால், நாளடைவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அல்சர் போன்றவை வர வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

அதனால், இரவில் நன்றாக தூங்குவதற்கு அஸ்வகந்தா சூரணம்  மற்றும் தண்ணீர்விட்டான் சூரணம் பொடி அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.

அதே போல, தூக்கம் வரவில்லை என்றால் அஸ்வகந்தா சூரணம் மற்றும் தண்ணீர்விட்டான் சூரணம் இரண்டையும் தலா அரை ஸ்பூன் எடுத்து, படுக்கைக்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

அதேபோல இரவு உணவு 8 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சாப்பிட்டு முடித்த பிறகு பால் குடிக்கலாம். நல்ல உறக்கம் வரும். மேலும் தூக்க மாத்திரைக்கு பதிலாக பாலில் ஏலக்காய், கிராம்பு பொடி சேர்த்து சாப்பிடலாம். 

அதேபோல கசகசாவை நெய்யில் வறுத்து பொடி செய்யவும். அதேபோல ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து ஆறவைத்து பொடி செய்து அனைத்தையும் பாலில் கலந்து குடிக்கலாம். தூக்க மாத்திரையே இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best sleep inducing foods Best tips to maintain healthy sleep

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: