/indian-express-tamil/media/media_files/2025/03/17/OfT0VUwqGWjb5Xp9Nh1m.jpg)
பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருக்கும் கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு கீரையும் தனித்துவமான பல்வேறு சத்துகளை கொண்டுள்ளன. இதனால் தான் தினசரி உணவில் ஒரு வகை கீரை இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ஆண்களின் விந்தணுக்களை அதிகரித்து, அதன் தரத்தை உயர்த்த பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆண்மைக் குறைவு பிரச்சனையையும் இது சரி செய்வதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரின் சருமத்தை பொலிவாக்கும் தன்மை பொன்னாங்கண்ணி கீரையில் இருக்கிறது. இதேபோல், சிறுநீரக கற்களை கரைக்கவும் இது உதவி செய்கிறது. மேலும், கண் பார்வையை கூர்மையாக்கும் தன்மையும் இதில் இருக்கிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாக கணினியை பயன்படுத்தி கண்களில் வறட்சி ஏற்பட்டவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை எடுத்துக் கொண்டால் அவை குணமாகும். சைனசைட்டிஸ், வறட்டு இருமல் மற்றும் மலச்சிக்கல் போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு பொன்னாங்கண்ணி கீரை தீர்வாக அமைகிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
எனவே, பொன்னாங்கண்ணி கீரை பொடியை அரை டீஸ்பூன் அளவிற்கு எடுத்து அத்துடன் உருக்கிய நெய் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 48 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். இதனால் ஒட்டுமொத்த உடலும் பொலிவாகும் என்று அவர் கூறுகிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.