வரகரிசியில் அரிசி மற்றும் கோதுமையை விட அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் புண்கள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இந்த வரகரிசியில் சுவையான பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம். நெய் ஊற்றி கமகமன்னு பொங்கல் செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
முதலில் பாசி பருப்பை எடுத்து, வாணலியில் சேர்த்து, நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். அதை ஒரு தட்டுக்கு மாற்றவும். வரகரிசியை எடுத்து, அதை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
Advertisment
Advertisements
ஒரு பிரஷர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் ஊறவைத்த வரகரிசியை சேர்த்து, அதைக் கலந்து, சமைக்க போதுமான தண்ணீர் ஊற்றவும். உப்பு சேர்த்து கலந்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பிரஷர் வெளியானதும், குக்கரைத் திறந்து, கலக்கி, தனியாக வைக்கவும். ஒரு சிறிய கடாயில், நெய் சேர்த்து, முந்திரி சேர்த்து நன்கு வறுக்கவும், அரைத்த மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு ஒரு சிட்டிகை பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தாளித்த பொருட்களை ஊற்றி நன்கு கலக்கவும். அவ்வளவுதான் ஆரோக்கியமான மற்றும் சுவையான வரகரிசி பொங்கல் பரிமாற தயாராக உள்ளது.