இரும்புச்சத்து அம்புட்டு இருக்கு... முருங்கைக் கீரையை ஒருமுறையாவது இப்படி செஞ்சு குடுங்க!
இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து சுவையான ஒரு டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம். கீரை வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து சுவையான ஒரு டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம். கீரை வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
உடலுக்கு மிகவும் சத்தான முருங்கைக்கீரை பொரியலை கொஞ்சம் சுவையாக செய்து கொடுத்தாலே எல்லோரும் சாப்பிடுவார்கள். முருங்கைக் கீரை பொரியல் கசக்கும் என்றும் அதன் சுவை பிடிக்காமல் இருப்பவர்களும் அதை ஒதுக்குவார்கள். ஆனால் அவற்றில் தேங்காய் எல்லாம் போட்டு சுவையாக எப்படி செய்வது என்று கிரேட் இந்தியன் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
முருங்கை கீரை எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பூண்டு வெங்காயம் உப்பு தேங்காய்
செய்முறை
முருங்கைக் கீரை இலை மட்டும் எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதில் காம்புகள் இல்லாமல் இலைகள் மட்டும் இருக்க வேண்டும். இவற்றை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வதக்கியதும் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை வதக்கி விடவும்.
பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளையும் சேர்த்து கலந்து விடவும். நன்கு வதங்கி இலை சுருண்டு வந்ததும் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கலந்து விட்டு வேக விடவும்.
கீரையை மூடி போடாமல் தான் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் ஆனதும் தண்ணீர் பற்றி முருங்கை இலை சுருண்டு இருக்கும் பின்னர் அதில் துருவிய தேங்காய் மேலே தூவி விட்டு கிளறி வர வர வென்று எடுக்கலாம்.
அவ்வளவுதான் இப்படி செய்து கொடுத்தால் கீரையில் எந்த கசப்பு சுவையும் தெரியாது கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சாதத்தை கொட்டி முருங்கைக்கீரை சாதம் மாதிரியும் கிளறி கொடுக்கலாம் மற்றபடி ரசம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.