Advertisment

நாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்... ஆனால் அது போதுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala has best coronavirus test rate in country, but is it enough

Kerala has best coronavirus test rate in country, but is it enough

Vishnu Varma

Advertisment

ஜனவரி 30 முதல், வுஹானில் இருந்து வந்து மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியபட்டதில் இருந்து, மாநிலத்தில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தற்போது, ​​அவர்களில் 215 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில், 24 பேர் முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும், கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது, மகாராஷ்டிரா 302 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது பல்வேறு காரணங்களுக்காகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு தான் பெரும்பாலும் வைரஸ் தொற்று உள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு தான் அதிக கொரோனா தொற்று உள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உள்ளன. இரண்டாவது காரணம், மாநிலத்தின் ஆரம்பகால தயார்நிலை மற்றும் அதன் வலுவான மற்றும் பரவலாக்கப்பட்ட நோய் கண்காணிப்பு அமைப்பு, வெளிநாட்டு திரும்பி வருபவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைக் கண்டறிந்து அறிகுறிகளை விரைவாக கண்காணிக்க இது சாத்தியமாக்கியது. மூன்றாவது, மற்றும் மிக முக்கியமான காரணம், கேரளாவின் ஆரம்பகால முயற்சிகள், அதன் அளவுகோல்களுக்கு ஏற்ற அனைவரையும் சோதித்துப் பார்ப்பதற்கும், மேலும் சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்களைத் திறப்பதற்கும் ஆகும்.

மார்ச் 31 ம் தேதி வெளியான தகவலின்படி, கேரளா மொத்தம் 7,485 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளது, அவற்றில் 241 சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 6,381 பேருக்கு கொரோனா இல்லை. மீதமுள்ள முடிவுகள் இன்னும் வரவில்லை. இது ஒரு மில்லியன் மக்களுக்கு 188.7 சோதனைகளுக்கு மேல் செயல்படுகிறது, இது இப்போது நாட்டின் மிக உயர்ந்த விகிதமாகும். இதற்கு நேர்மாறாக, கர்நாடகாவின் சோதனை விகிதம் ஒரு மில்லியன் மக்களுக்கு 47.4 ஆக உள்ளது, மகாராஷ்டிரா ஒரு மில்லியனுக்கு 29.3 என்று உள்ளது.

publive-image

ஆனால் சோதனை விகிதத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தெளிவான விளிம்பில் இருந்தபோதிலும், மக்களுக்கிடையே பரவாமல் இருக்கும் அளவிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேரளாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் கடுமையான ஊரடங்கு மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தால் மட்டுமே, நெருக்கடியை மாநில அரசு சமாளிக்க முடியும். ஏப்ரல் முதல் வாரம் கேரளாவுக்கு இரு மடங்கு முக்கியமானது: விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தலின் கடைசி வாரம் இது. கொரோனா பாதிப்பு அதிவேக உயர்வு ஏற்பட வாய்ப்பு இருந்தால், அது இப்போதுதான்.

நாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்... ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி!

மாநிலங்கள் அதிகமாக சோதித்தால் மட்டுமே அதிகமான பாதிப்புகள் மறைவிலிருந்து வெளியேறும் என்பது பொதுவான காரணம். இல்லையெனில், அந்த நபர்கள் சமூகத்திற்குள் தெரியாமல் தொற்றுநோயை பரப்பும் ஆபத்து அதிகம். அதிக பாதிப்புகள் கண்டறியப்படும்போது, ​​உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படலாம், வயதானவர்கள், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தலாம்.

"100 பேருக்கு பரிசோதனை செய்கையில், நீரிழிவு நோயை சரிபார்க்க நான் உங்களிடம் கேட்கும் போது, அதில் 5 பேருக்கு மட்டும் நீரிழிவு நோய் இருந்தால், கேரளாவில் ஐந்து நீரிழிவு நோயாளிகள் மட்டுமே உள்ளனர் என்று அர்த்தமா? இல்லை, எனவே நீங்கள் முடிந்தவரை பலரை சோதிக்க வேண்டும். இப்போது, ​​நாம் சோதனையை குறைந்தது 30 தடவைகள் அதிகரிக்க வேண்டும். நாம் ஒரு மில்லியனுக்கு 200 என்ற சோதனை விகிதத்தில் இருக்கிறோம். ஒரு மில்லியனுக்கு 5000-6000 என்ற நிலையை நாம் அடைய வேண்டும்," என்று புகழ்பெற்ற வாத நோய் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் பத்மநாப ஷெனாய் கூறினார்.

கோவிட் -19 க்கான உறுதிப்படுத்தும் சோதனையான பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) க்கான சோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று ஐ.சி.எம்.ஆர் சொன்னாலும், பல மாநிலங்கள் தட்டுப்பாட்டை உணர்கின்றன, மேலும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு அவற்றை சேமித்து வைக்கின்றன.

publive-image

டாக்டர் ஷெனாய் மேலும் கூறுகையில், “ஆம், சோதனை கருவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், மையம் அதை முடுக்கிவிட வேண்டும். இது ஒரு தேவை. முன்கூட்டியே மொத்த ஆர்டர்களைச் செய்யுங்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் அவற்றை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் மொத்தமாக ஆர்டர் செய்யும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் அதைச் செய்ய உங்களுக்கு அரசியல் ஆளுமை இருக்க வேண்டும்".

மாநில சுகாதார அதிகாரி (பொது அவசரநிலை) டாக்டர் அமர் ஃபெட்டில் கூறுகையில், "ஒரு சிறந்த உலகில், WHO தலைவர் சொல்வது போல் நாம் செய்ய முடியும். ஆனால் அதற்கான வளங்கள் இருக்க வேண்டும். நாங்கள் மட்டும் கோரும் நபர்கள் அல்ல. இந்திய அரசு எந்த வளங்களை வைத்திருந்தாலும் வெவ்வேறு மாநிலங்களிடையே பிரிக்கப்படுகிறது. எனவே நாம் எங்காவது ஒரு சமநிலையை அடைய வேண்டும்" என்று கூறினார்.

"மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​நாம் சிறப்பாக செயல்படுகிறோம். நாம் ஒரு பெரிய முழுமையான எண்ணை சோதித்தோம். மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக சோதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். உங்களிடம் 10 சோதனை கருவிகள் இருந்தால், மிகவும் மோசமடைந்த நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில், ஒவ்வொரு நபரையும் நம்மால் சோதிக்க முடியாமல் போகலாம். அந்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் தனிமைப்படுத்தும் முறைக்கு செல்கிறீர்கள். நமக்கு இறுக்கமான தனிமைப்படுத்தல் மற்றும் இறுக்கமான மேலாண்மை தேவை. ”

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனையில் சேருவதற்கான கேரள சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள் மார்ச் இரண்டாவது வாரத்தில் திருத்தப்பட்டன. இது ஒரு ‘சந்தேக நபர்’ வழக்குக்கான குறிப்பிட்ட வரையறைகளையும், பாதிக்கப்பட்டவர்களின் அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்துள்ள ‘தொடர்புகளையும்’ வகுத்துள்ளது. மார்ச் 12 ம் தேதி ஒரு சுற்றறிக்கையில், “கோவிட் -19 இன் தொற்றுநோய் 75-80 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே உருவாக்கும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடுமையான தொற்று மற்றும் இறப்பு முதியவர்கள் போன்ற அதிக வயதுடையவர்களில் மட்டுமே காணப்படுகிறது.

"எந்த வைரஸ் தொற்றுநோயையும் போலவே, கோவிட் -19 பெரும்பாலான நோயாளிகளிடமும் தீர்க்கப்படும். கோவிட் -19, சார்ஸ், மெர்ஸ் தொற்றுநோயியல் மருத்துவமனைகள் தொற்றுநோய்க்கான பெருக்க மையங்களாக செயல்படுகின்றன என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன. நியமிக்கப்பட்ட கோவிட் -19 மையங்களின் பிஸியான வெளிநோயாளர் பகுதிகளில் வெவ்வேறு இடர் வகைப்படுத்தலுடன் நோயாளிகள் கலப்பதால் இது நிகழ்கிறது. எனவே லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். லேசான அறிகுறிகளுடன் நோயாளியின் மருத்துவப் போக்கையோ அல்லது நிர்வாகத்தையோ பரிசோதனை மாற்றப்போவதில்லை ”என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதனம்திட்டா மாவட்டத்தில் தேசிய சுகாதார பணியுடன் ஒரு மூத்த மருத்துவர் இந்த திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார். “இது சரியான வழி, ஏனென்றால் நாங்கள் இப்போது அதிக சுமை ஏற்க விரும்பவில்லை. நோய் உள்ளவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும், அவை தானாகவே தீர்க்கப்படும். அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை. அவர்கள் தேவைப்படுவது நோயறிதலுக்கான சோதனை மட்டுமே" என்றார்,

தப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை

அவரைப் போன்ற டாக்டர்களால் இன்னும் போதுமான அளவு சோதிக்கப்படுகிறதா என்பதை மதிப்பிட முடியவில்லை, ஏனெனில் இது தொற்றுநோயின் அதிவேக கட்டத்தில் நுழையவில்லை. "நாம் இன்னும் பின்னடைவில் இருக்கிறோம், அங்கு ஒரு நாளைக்கு பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவில்லை."

நாட்டின் ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான பதானம்திட்டா போன்ற மாவட்டங்களில், முன்பை விட ஒவ்வொரு நாளும் சோதனைக்கு அதிகமான மாதிரிகள் அனுப்பப்படுவதாகக் மருத்துவர்கள் கூறினர், வைரஸ் தொற்று முதன் முதலில் ஏற்பட்ட போது, ​​கேரளா ஆலப்புழாவில் உள்ள என்.ஐ.வி ஆய்வகத்தில் மட்டுமே மாதிரிகளை சோதிக்கத் தொடங்கியது. ஆனால் இப்போது, ​​மற்ற எட்டு ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு தனிமையில் சிகிச்சையளிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா முதல் வரிசை சிகிச்சை மையங்களை அமைக்கும் திட்டங்களும் உள்ளன.

இதுவரை, ஒவ்வொரு நேர்மறையான நிகழ்வுகளிலும் நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய முடிந்தது என்ற அடிப்படையில் மாநிலத்தில் சமூகம் பரவுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆனால் திருவனந்தபுரத்தில் அண்மையில் 68 வயதான ஒருவர் திடீரென மரணம் அடைந்தார், எந்தவொரு வெளிநாட்டு பயணமும் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுவது மருத்துவர்களையும் அதிகாரிகளையும் உலுக்கியுள்ளது. அவசர நடவடிக்கையாக, போத்தன்கோட் வட்டாரத்தில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

publive-image

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிவது கடினமாகிவிட்டால், ஸ்கிரீனிங் சோதனையாக ‘விரைவான ஆன்டிபாடி சோதனைகளை’ நடத்தும் யோசனை சுகாதாரத் துறையின் மனதில் உள்ளது. கோவிட் -19 ஐக் கண்டறிவதற்கு ஆன்டிபாடி சோதனைகளை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைக்கவில்லை, ஏனெனில் இது தவறான நேர்மறைகளையும் எதிர்மறைகளையும் தரக்கூடும்.

கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (கேஜிஎம்ஓஏ) டாக்டர் ஜோசப் சாக்கோ இந்த யோசனையை ஆதரித்தார். “சமூகம் பரவுவதை சரிபார்க்க விரைவான சோதனைகளை உடனடியாக தொடங்க வேண்டும். கருவிகளை உடனடியாக வாங்க வேண்டும் மற்றும் செயல்படுத்தத் தொடங்க வேண்டும். விரைவான சோதனை நேர்மறையானதாக இருந்தால், உறுதிப்படுத்தும் சோதனை செய்ய வேண்டும். 80 சதவீத நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் வைரஸைக் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கலாம். எனவே விரைவான சோதனைகள் சமூகத்திற்குள் நடத்தப்பட வேண்டும். ”

மார்ச் 29 ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவான சோதனைகளை நடத்துவதற்கு ஐ.சி.எம்.ஆரிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், புனேவின் ஐ.சி.எம்.ஆர் மற்றும் நிவி ஆகிய நிறுவனங்களால் வழங்கப்படும் கிட்களை வாங்குவதற்கான திட்டங்களை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கடுத்த நாட்களில், இந்த செயல்முறையைத் தொடங்கத் திட்டமிட்டபோது அது கிட்களைப் பெற்றதா என்பதைத் துறை தெளிவுபடுத்தவில்லை.

ஐ.எம்.ஏ இன் டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ் கூறுகையில், "எந்த சோதனையும் முட்டாள்தனமானது அல்ல. அப்படியிருந்தும், 50-60 சதவீத வழக்குகளை அதன் மூலம் அடையாளம் காண முடிந்தால், அதைச் செய்வது மதிப்புக்குரியது" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment