Advertisment

தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவி - பொதுவெளியில் தாக்கிய போலீஸ் கணவர்

நரேந்திர சூர்யவன்ஷி என்பவர், வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த அவரது மனைவிக்கும், நரேந்திராவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madhya Pradesh cop thrashes wife for opposing his illicit affair video

மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

ட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு!

கண்ட்வானி காவல்நிலையத்தில் பொறுப்பாளராக பணியாற்றும் நரேந்திர சூர்யவன்ஷி என்பவர், வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த அவரது மனைவிக்கும், நரேந்திராவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர், தனது மனைவியின் தலைமுடியை பிடித்து சாலைக்கு இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது எடுத்த செல்போன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்... தமிழர்களின் நிலை என்ன?

இந்நிலையில், நரேந்திர சூர்யவன்ஷி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "
Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment