ஜஸ்ட் 101 வயது தான் - மன வலிமையால் கொரோனாவை வென்ற மூதாட்டி

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தானே வழிகாட்டிய மங்கம்மா, திருப்பதியில் உள்ள யெரமிட்டாவில் உள்ள தனது வீட்டிற்கு சரியாக சென்று சேர்ந்தார்

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தானே வழிகாட்டிய மங்கம்மா, திருப்பதியில் உள்ள யெரமிட்டாவில் உள்ள தனது வீட்டிற்கு சரியாக சென்று சேர்ந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜஸ்ட் 101 வயது தான் - மன வலிமையால் கொரோனாவை வென்ற மூதாட்டி

அவர் நலம் பெற்றதற்கு மன வலிமையே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 13.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,063 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு விகிதம் 2.3 சதவீதமாக உள்ளது. இதுவரை 8,85,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.9 சதவீதமாக உள்ளது.

Advertisment

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதான நபர்கள்கூட, தீவிர மருத்துவ கவனிப்பினால் குணமடைவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அவ்வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

101 வயதான ஒரு மூதாட்டி கோவிட் -19 ல் இருந்து மீண்டு, திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் நலம் பெற்றதற்கு மன வலிமையே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

‘வேகமாக பரவுகிறது கோவிட்-19, அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது’-பிரதமர் மோடி மான் கி பாத் உரை

Indianexpress.com உடன் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ராம், பி மங்கம்மா லேசான அறிகுறி மற்றும் இருமலுடன் ஜூலை 14 அன்று அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வைரஸ் தொற்று இல்லை. மருத்துவமனையில் COVID கவனிப்புக்காக அவர் பொது தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

"அவருடைய வயதைப் பற்றி நாங்கள் அறிந்தபோது, மஞ்சுளா எனும் சுகாதார ஊழியரை அவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய நியமித்தோம். நியமிக்கப்பட்ட தொழிலாளி மஞ்சுலாவின் பொறுப்பு மங்கம்மா, மற்றும் பார்வையற்ற 9 வயது நோயாளியைக் கவனிப்பது மட்டுமே. மங்கம்மா மிகவும் ஒத்துழைப்புடன் இருந்தார், எதையும் பற்றி ஒருபோதும் புகார் செய்யவில்லை,” என்று கண்காணிப்பாளர் கூறினார்.

மூதாட்டியின் மனநிலை குறித்து கேட்டபோது, ​​தவறான விவரங்கள் காரணமாக அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாததால், ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தானே வழிகாட்டிய மங்கம்மா, திருப்பதியில் உள்ள யெரமிட்டாவில் உள்ள தனது வீட்டிற்கு சரியாக சென்று சேர்ந்தார்.

“ஆம், அவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை அறிந்திருந்தார். நோயின் பாதிப்பு அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரது வலுவான மனநிலை காரணமாக அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என நான் நம்புகிறேன்" என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.

மருத்துவமனையில் COVID இலிருந்து வெற்றிகரமாக குணமடைந்த மிக வயதான நோயாளி 89வயதுடையவர் அவர். தற்போது, ​​93 வயதான மற்றொரு நோயாளி இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு – தூர்தர்சனில் நேரலையாக ஒளிபரப்பு

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால், மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அஞ்சும் அனைவருக்கும் மங்கம்மாவின்வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் உத்வேகம் என்று டாக்டர் ராம் கூறினார்.

திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில், 2895 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 300 புதிய பாதிப்புகள் சனிக்கிழமை பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 44,431 ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: