george floyd, george floyd death, george floyd death news, டிரம்ப், கறுப்பின நபர் கொலை, அமெரிக்க அதிபர், அமெரிக்காவில் கலவரம், george floyd news, usa news, george floyd death protests, minneapolis, black lives matter, us protests, donald trump, george floyd recent news, george floyd video, george floyd latest news
அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு கடுமையான பதிலை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
Advertisment
திங்கள்கிழமை மாலை அவர் பேசுகையில், வாஷிங்டன் உட்பட அனைத்து பகுதிகளில் ஒழுங்கைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக டிரம்ப் உறுதியளித்தார். கடந்த வாரம் மினியாபோலிஸில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக மூன்று நாட்கள் நடந்த அமைதியான போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளது.
மக்கள் கடைகளை சூறையாடுவதும், கொள்ளையடிப்பதும், வாகனங்களுக்கு தீவைப்பதும், போலீஸாரைத் தாக்குவதுமாக இறங்கினார். இதனால் பல இடங்களில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைக்குண்டுகள், பெப்பர் ஸ்ப்ரே, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் போலீஸார் கூட்டத்தினரைக் கலைத்தனர்
"அழிவு மற்றும் தீ விபத்துக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கலவரத்தையும் கொள்ளையையும் நிறுத்த நான் இராணுவத்தை அணி திரட்டுகிறேன். நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானேதான் பொறுப்பு. மாநில ஆளுநர்கள் அமைதிைய நிலைநாட்டாமல் என்ன செய்கிறீர்கள்?அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்" என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இருந்து கூறி உள்ளார்.
ஜனாதிபதி பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகை அதிகாரிகள் அவரது உரைக்கு தயாரான போது, பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் குண்டுகளைப் பயன்படுத்தி லாஃபாயெட் சதுக்கத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து வெள்ளை மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர். அவரது சுருக்கமான உரையின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டங்களின் போது தீ விபத்துக்குள்ளான வரலாற்று சிறப்புமிக்க செயிண்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு அவர் அறிவிக்கப்படாத பயணம் மேற்கொண்டார்.
ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க "தேவையான" நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அதிகாரிகள் மறுத்துவிட்டால், "நான் அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவேன், அவர்களுக்கான பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன்" என்று டிரம்ப் கூறினார்.
My fellow Americans - My first and highest duty as President is to defend our great Country and the American People. I swore an oath to uphold the laws of our Nation -- and that is exactly what I will do… pic.twitter.com/pvFxxi9BTR
"நாங்கள் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம், சட்டவிரோதத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் மேலும் இடையூறுகளைத் தணிக்க முற்படுகையில் 600 முதல் 800 தேசிய காவல்படை துருப்புக்கள் வாஷிங்டனுக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கூற்றுப்படி, தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பது, வெள்ளை மாளிகையைப் பாதுகாப்பது மற்றும் வாஷிங்டனின் போலீஸுடன் ஒருங்கிணைப்பது அவர்களின் முக்கிய பங்கு.
அதே நேரத்தில், வாஷிங்டன் பிராந்தியத்திற்கு வெளியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த படை, அந்த பகுதியில் இருந்து நகர்த்தப்பட்டு, எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் உடனடியாக தலைநகருக்கு அனுப்பப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துருப்புக்களை அனுப்ப, 1807 கிளர்ச்சி சட்டத்தை நம்புவது குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார், இது சிவில் கோளாறுகளைச் சமாளிக்க யு.எஸ். க்குள் இராணுவத்தை நிலைநிறுத்த ஜனாதிபதியை அங்கீகரிக்கிறது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த மூன்று பேர் கூறுகின்றனர்.
கூட்டாட்சி சட்டம் பொதுவாக இராணுவத்தை உள்நாட்டில் சட்டங்களை அமல்படுத்துவதைத் தடுக்கிறது. பொதுமக்கள் சட்டங்களைச் செயல்படுத்த இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தடை தேசிய காவலரை உள்ளடக்கியது.
கலவரங்கள் குறித்து டிரம்ப் கூறுகையில், ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையால் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மாநில ஆளுநர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துங்கள், போலீஸாருடன் சேர்ந்து தேசிய பாதுகாப்பு படையினரையும் பயன்படுத்துங்கள். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான ஆளுநர்கள் பலவீனமாக இருக்கிறீர்கள். வன்முறையில் ஈடுபடும் மக்ளை கைது செய்யுங்கள்.
நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானே பொறுப்பு. பல்வேறு நகரங்களில் நடக்கும் வன்முறைகளை மேயர்களும், ஆளுநர்களும் கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களின் உடைமைகளையும் உயிர்களையும் காக்காவி்ட்டால் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கி சிறிது நேரத்தில் அமைதியைக் கொண்டுவந்துவிடுவேன்.
ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மக்கள் அனைவரும் அமைதியிழந்து இருக்கிறார்கள். நிச்சயம் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்படும். ஆனால், போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஆளுநர்களும், மேயர்களும் அனுமதி்க்கக்கூடாது.
வன்முறையில் ஈடுபடுவோரை கைது செய்யுங்கள், அவர்களைத் தேடி கண்டுபிடியுங்கள், 10 ஆண்டுகள் வரை சிறையில் அடையுங்கள். இதுபோன்ற கடினமான செயலை அவர்கள் பார்த்திருக்கூடாது. மக்கள் இதற்கு முன் பார்க்காதவற்றை நாம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸாருக்கு துணையாக தேசிய பாதுகாப்பு படையினரை இறக்காமல் ஆளுநர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்குகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“