Advertisment

ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்… 4 நாள் வரை கெட்டுப் போகாத சுவையான சட்னி!

Simple steps to make Poondu or Garlic Chutney Recipe in tamil: பூண்டு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்ற சூப்பரான சட்னியாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Poondu Chutney in Tamil: how to make Garlic Chutney Recipe in Tamil

Poondu Chutney in Tamil: இந்திய உணவு வகைகளில் ஈடுசெய்ய முடியாத ஒரு பொருளாக பூண்டு உள்ளது. நம்முடைய அன்றாட சமையலில் நிச்சயம் இடம்பிடிக்கும் இந்த பூண்டு காய்கறிகள், கறி மற்றும் பருப்புகளில் சேர்க்கப்படுகிறது. மேலும், நாம் தாயார் டிஷுக்கு சரியான சுவையையும் நறுமணத்தையும் இவை தருகிறது.

Advertisment

பூண்டில் ஊறுகாய், துவையல், சட்னி பல வகைகளில் தயார் செய்யலாம். அந்த வகையில், பூண்டு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்ற சூப்பரான சட்னியாகும். ஒரு காரசாரமான பூண்டு சட்னிக்கான சிம்பிள் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

publive-image

தேவையான பொருட்கள்

பூண்டு - 3

புளி - எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

வரமல்லி - 1 ஸ்பூன்

தனி மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

வெல்லம் - சிறிய துண்டு

உப்பு - சுவைக்கு

பூண்டு சட்னி செய்முறை

முதலில் ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பதத்தில் புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு, 3 முழு பூண்டுகளை தோலுரித்து சுத்தம் செய்து உரலில் போட்டு நசுக்கி கொள்ளவும்.

தொடர்ந்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், துருவி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயில் சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பூண்டை வதக்கவும்.

இந்த இடத்தில பூண்டு கருகிப் போய் விடக் கூடாது. அதே சமயம் பச்சை வாடையும் வீசக் கூடாது என்பதை மனதில் கொள்ளவும்.

தொடர்ந்து வர மல்லியை இடுக்கியில் போட்டு இடித்து நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.

பூண்டினை பச்சை வாடை போக வதக்கிய பின்பு, ஒரு 1 ஸ்பூன் இடித்து வைத்திருக்கும் வர மல்லியை பூண்டுடன் சேர்க்கவும்.

அடுத்து தனி மிளகாய்த் தூளை எண்ணெயில் சேர்த்து பூண்டுடன் நன்றாக வதக்கவும். மிளகாய் தூள் கருதிவிடக்கூடாது. மிளகாய்த்தூளை பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதுமானது.

தொடர்ந்து 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்தூளின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

4 நிமிடங்கள் சட்னி நன்றாக கொதித்த பின், முன்னர் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். புளியின் பச்சை வாடை போகும் வரை மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் ஓரத்தில் பிரிந்து மேலே மிதந்து வரும் பட்சத்தில், சட்னி பக்குவத்தில் வரும்

இந்த தருணத்தில் பெருங்காயம், வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்து கீழே இறக்கவும்.

இப்போது சூப்பரான, காரசாரமான பூண்டு சட்னி ரெடி. இந்த டேஸ்டி சட்னியை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிட்டு வரலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Garlic
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment