Tamil Health Update : மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு தனி இடம் உண்டுஇ செயற்கை மருத்துவத்தை விட இயற்கையில் கிடைக்கும் பல உணவு பொருட்கள் ஆரோக்கியத்தை அதிகளவில் கொடுக்கும் வல்லமை நிறைந்தது. அந்த வகையில் இந்திய காய்கறிகள், பழங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் நல்ல ஆரோக்கியத்தின் சக்தி வாய்ந்ததாக அறியப்படுகிறது. ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
அந்த வகையில் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில், ஆம்லா அல்லது இந்திய நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முடி உதிர்தல், செரிமானம் மற்றும் கண்பார்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல வாழ்க்கை முறை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால் நெல்லியின் முழு நன்மைகளையும் பெற அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது தெரியுமா? இது குறித்து ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பாவ்ஸர் நெல்லிக்கணியை தினசரி உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவில், உலர்ந்த பொடியாகவோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பெர்ரி கலவைகளாகவோ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பச்சையாக, வெல்லத்துடன், முரப்பாக, அல்லது ஊறுகாய் வடிவில் உட்கொள்ளலாம். இது குளிர்காலத்தில் ஒரு பருவகால பழமாகும்.
தூள்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆம்லா பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
சாறு: காலையில் முதலில் வெதுவெதுப்பான நீரில் 20 மிலி ஆம்லா சாறு எடுத்துக் சேர்த்து உட்கொள்ளலாம்
சியவன்ப்ராஷ்: சியவன்ப்ராஷின் முக்கிய மூலப்பொருள் அம்லா. நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி சயவன்ப்ராஷ் சாப்பிடலாம்.
அம்லா முரப்பா மற்றும் ஊறுகாய்: " குளிர்காலத்தில் முரப்பா அல்லது ஊறுகாயை சந்தையில் புதிய நெல்லிகளுடன் செய்து உங்கள் உணவை தினமும் சாப்பிடுங்கள்," என்று அவர் கூறினார்.
புளிக்கவைத்த பழம்: நீங்கள் அம்லாவை புளிக்கவைத்து தினமும் ஒன்று-இரண்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும்போது நெல்லிக்கனியின் முழு நன்மைகளையும் நாம் பெறமுடியும்.
ஆம்லா மிட்டாய்: நீங்கள் அம்லாவை துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கலாம். அவை போதுமான அளவு காய்ந்தவுடன்- அவற்றை சேமித்து வைத்து அவற்றை தினமும் மிட்டாய்களாகப் போடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil