/tamil-ie/media/media_files/uploads/2020/05/Jothimani-MP-and-Karu-Nagarajan.jpg)
mp jothimani, Jothimani quits TV debate over Karu Nagarajan's derogatory speech
Jothimani MP: செய்தி சேனல்களில் விவாத நிகழ்ச்சி என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த வகையில், நேற்று மாலை ஏழு மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில், கேள்வி நேரம் என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரு நாகராஜனை உட னே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்
Its shameful that people like Karun Nagrajan exist, this BJP spokesman called @jothims ji a person of “low birth” & he didn’t stop here and said that she is “ low ilk of the society”.
This is NOT ACCEPTABLE and he should apologise. #I_standwith_Jothimani#jothimanipic.twitter.com/kOz2Ll8y5p
— Udbhav Bhatt (@udbhav02) May 18, 2020
பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.
— Jothimani (@jothims) May 18, 2020
இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani
லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அன்றும் பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது.
— Jothimani (@jothims) May 18, 2020
ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. எனது நேரமையும்,துணிச்சலும் உலகறியும்.
— Jothimani (@jothims) May 18, 2020
அப்போது பேசிய கரு நாகராஜன், ஜோதிமணி எம்பி-யை இழிவாக குறிப்பிட்டார். டிவி விவாதம் என்பதை மறந்து, சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணை பொதுவெளியில் இழிவாக அழைத்தார். நாகராஜனை கண்டித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஜோதிமணி. பின்னர் பாஜக உறுப்பினரின் இந்த இழிவான செயலை கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதியும் வெளியேறினார்.
ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு: டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்
இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! #I_Stand_with_Jothimanipic.twitter.com/LoPmYnwzsp
— Jothimani (@jothims) May 18, 2020
இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Jothimani (@jothims) May 18, 2020
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஜோதிமணி, ”ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து, அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக, ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து, பாஜகவின் கரு நாகராஜன் என்கிற மூன்றாம் தரமான மனிதரின், தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு, களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.