Advertisment

கொரோனா வைரஸ் : பாதிப்பு அதிகமுள்ள சென்னையின் 7 மண்டலங்கள்

கோயம்பேடுடன் தொடர்புடைய சுமார் 6,900 வர்த்தகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 1,300 பேர் சென்னையில் உள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid 19, corona, chennai corporation, chennai corona zones, royapuram, thiru.vi.ka nagar, kodambakkam, teynampet, anna nagar

coronavirus latest news updates

COVID-19 நேர்மறை வழக்குகளில் பெரும்பான்மையாக பதிவாகியுள்ள ஏழு மண்டலங்களை சென்னை கார்ப்பரேஷன் அடையாளம் கண்டுள்ளது என, மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisment

தூத்துக்குடி: சிறுமியை திருமணம் செய்த பஞ்சாயத்து துணை தலைவர் கைது

வியாழக்கிழமை, சென்னை நகரில் 316 நேர்மறையான வழக்குகள் பதிவாகின. தொற்று பரவாமல் தடுக்க 451 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திரு.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம், திரு.வி.க நகர், ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனம்பேட்டை, தண்டையார் பேட்டை மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்கள் நகரத்தில் நேர்மறையான நிகழ்வுகளில் பெரும்பாலான இடத்தைப் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் வழக்குகள் செறிவூட்டப்படுவதை சுட்டிக்காட்டிய திரு. ராதாகிருஷ்ணன், சென்னை நகரத்தின் 20 வார்டுகளில் 50% வழக்குகள் பதிவாகியுள்ளன என்றார். சுமார் 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரில் 200 வார்டுகள் இருக்கின்றன.

ஏ.டி.எம்-கள், அலுவலகங்கள் மூடப்பட்டன

வடசென்னையில் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஏடிஎம் மற்றும் பொது கழிப்பறைகள் தொற்றுநோய்க்கான ஆதாரங்களாக மாறுவதை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் குழுக்கள் நிலைமையை ஆய்வு செய்துள்ளன என்றார்.

“கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்களுக்கான மொபைல் ஏடிஎம்-ஐ விரைவில் தொடங்குவோம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன” என்றார்.

மேம்பட்ட சுகாதார வசதிகள் காரணமாக சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலான இறப்பு விகிதங்களை சுட்டிக்காட்டிய திரு. ராதாகிருஷ்ணன், இது நகரத்தில் வெறும் 0.9% மட்டுமே என்றார். "நாங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கவனம் செலுத்தியுள்ளோம். அறிகுறிகளுடன் கூடிய குடியிருப்பாளர்களை சோதனைக்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். தாமதமான முன் வராவிட்டால் பின்னர் அது ஒரு சவாலாக மாறும்” என்று அவர் கூறினார்.

6,900 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

"லயோலா கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக நாங்கள் மூலிகை உணவை அறிமுகப்படுத்தியுள்ளோம். சில பகுதிகளில் இந்திய மருத்துவத்திற்கு நல்ல முடிவுகள் தெரிய வந்திருக்கிறது.  கோயம்பேடுடன் தொடர்புடைய சுமார் 6,900 வர்த்தகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 1,300 பேர் சென்னையில் உள்ளனர்” என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Corona Updates Live : அவுரங்காபாத்தில் ரயில் மோதி விபத்து – 14 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்

நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவமனைகள் மற்றும் COVID-19 பராமரிப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார். "நகரத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அனைத்து மருந்துகளையும் வழங்கும். எங்களுக்கு குடியிருப்பாளர்களின் ஆதரவு தேவை” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment