corona virus. Corona virus tamil news, corona for journalist, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, Corona virus news in tamil, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms
COVID-19 For Journalists in Chennai: சென்னையில் மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
அவர்களில் மூன்று பேர் ஒரே தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனலில் வேலை செய்கிறார்கள், நான்காவது நபர் மற்றொரு சேனலில் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலின் 26 ஊழியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நிலையில், மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களில் ஒரு தமிழ் செய்தித்தாள் நிருபருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் பத்திரிகையாளருக்கும் கொரானா தொற்று உறுதியான நிலையில், சென்னை முழுவதும் பல பத்திரிகையாளர்கள் தாமாக சோதனைக்கு முன்வந்தனர்.
இரண்டு நாட்களில் ஓமந்தூரார் பிரத்யேக COVID-19 நோய் சிகிச்சை மருத்துவமனையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
"மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மொத்த 400 மாதிரிகளில் (பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் உட்பட) ஐந்து முடிவுகள் பாஸிட்டிவாக வந்துள்ளன. அவற்றில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தொற்று" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பத்திரிகையாளர்களும் ஓமந்தூரார் கோவிட் -19 சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.