Headline News in Tamil : தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கியமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் இந்த இணைப்பில்!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் இருபாலருக்குமான ஆடை குறித்த அறிவிப்பினை வெளியிட்டது தமிழக அரசு
மத்திய அரசின் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கைக்கான திட்ட வரைவுகளை கஸ்தூரி ரங்கன் அடங்கிய 9 பேர் கொண்ட குழு சமர்பித்தது
03/06/2019 – மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி விழாக்கோலம் பூண்டது அண்ணா அறிவாலயம். ஒய்.எம்.சி.ஏ (நந்தனம்) மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம்.
ஐந்தாண்டுகளுக்குள் ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்பவில்லை என்றால் பாஜக மீது வழக்கு தொடுப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு
மும்மொழிக் கொள்கைக்கான மத்திய அரசின் திட்டவரைவை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தங்களின் வலுவான எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
Web Title:Headline news in tamil live updates check this link for latest breaking tamil news
ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர்நீதிமன்றம் நாளை(june 03) முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது.
தருமபுரி: அரூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
விருதுநகர்: சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை
அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்
- கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பற்றி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் ட்வீட்
புதிய கல்வி கொள்கையின் வரைவை பொதுமக்கள் படித்து, அதுபற்றி விவாதிக்க வேண்டும், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் - குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்
தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்
மக்கள் கருத்தை கேட்டறிந்த பின்பே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்
நாளை ( ஜூன் 3ம் தேதி) கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பதவி ஏற்பார்
தமிழக அரசுப் பணியில் சேர பொறியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு: 475 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 28 - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா, டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். மத்திய நிதியமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீத்தாராமனுக்கு திவ்யா, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த பதிவை திவ்யா நீக்கியிருந்தார். இதுகுறித்த விளக்கம் திவ்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்படாத நிலையில், அவரே டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் . சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை - தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இளையராஜாவின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த அன்பிற்கு நான் எப்படி பதில் சொல்லப் போகின்றேன் என்று கூறியதோடு அல்லாமல் இன்று தன் ரசிகர்களுக்காக முக்கியமான செய்தி ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனியாக பிரிந்து தனி மாநில அந்தஸ்த்து பெற்ற நாள் இன்று. தெலுங்கானா மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றும் அர்பணிப்புகள் குறித்து ட்வீட் செய்த மோடி, இந்நாளில் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமியின் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் பகல் 12 மணியோடு நிறைவடைகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 அரசின் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், வரும் கல்வியாண்டிற்குள் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெறாவிட்டால், அப்பள்ளிகள் மூடப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
நாடு முழுவதும் உள்ள 72 தேர்வு மையங்களில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கான தேர்வுகளின் முதல்நிலை தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
முதல்தாள் 11 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 02.30 முதல் மாலை 04:30 வரையில் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் செப்டம்பர் 20ம் தேதி முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று தன்னுடைய 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இசைஞானி இளையராஜா. அவருடைய அரிய புகைப்படங்களை பார்க்க
மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 46.40 கன் அடியாக உள்ளது. நீர் இருப்பு : 15.62 டி.எம்.சி ஆகும். நீர்வரத்து 178 கன அடி மற்றும் நீர் திறப்பு 1000 கன அடி
அமமுக பிரமுகர் சரவணன் கொலை வழக்கில் மூன்று நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை
சமூக செயற்பாட்டாளர் திரு.முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கும் மேலான நிலையில் அவர் காணாமல் போனது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். ஓசூர் மாநிலம் மத்திகிரியில் தன்னுடைய ஜெய்பீம் அமைப்பு மற்றும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அம்பேத்கார் அரசியல் பள்ளி, நூலகம் மற்றும் இரவு பாடசாலை துவக்கவிழாவின் போது இவர் முகிலன் குறித்து கூறியுள்ளார்.
நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உலக பால் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில வனம் வனவிலங்கு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜூ தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வரும் பாலின் தரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் 19 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், கேரளத்தில் 34 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறிய அவர் தமிழகத்தில் இருந்து வரும் பாலின் தரம், அடர்த்தி குறித்து ஆய்வு செய்ய தமிழக - கேரள எல்லையில் மேலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்படும் என்று கூறினார்.
மும்மொழிக் கொள்கை குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவின் உண்மை முகம் தெரிய துவங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒரு அங்கமாகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை மத்திய அரசு இன்னும் அது குறித்த முடிவினை எட்டவில்லை என்றும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும் நன்றி கூற நாம் நந்தனத்தில் இணைந்திடுவோம் என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய சங்கத்தைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இன்று கன்னியாகுமரி பகுதியில் மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, முஞ்சிறை, புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகின்றது.